பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

11 Dec 2010

கோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு!

என்ன..!!! என்ன.. மேட்டருன்னு கேட்கறீங்களா கண்ணு...???

கீழே இருக்கிறத படிச்சிப் பாருங்க... உங்களுக்கே புரிப்படும்...


பெங்காளிகாரர் ஒருத்தரு செய்த நல்ல காரியம் என்னான்னு படிச்சுப்பாருங்க...

ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே...உன்னில் பயணித்தது
ஞாபகம் வருதே...

Okhil Babu's letter to the Railway Department

"I am arrive by passenger train Ahmedpur station and my belly is too much swelling with jackfruit. I am therefore went to privy. Just I doing the nuisance that guard making whistle blow for train to go off and I am running with 'lotah' in one hand and dhoti' in the next when I am fall over and expose all my shocking to man and female women on plateform. I am got leaved at Ahmedpur station.

This too much bad, if passenger go to make dung that dam guard not wait
train five minutes for him. I am therefore pray your honour to make big fine on that guard for public sake. Otherwise I am making big report to papers."

Okhil Chandra Sen wrote this letter to the Sahibganj divisional railway
office in 1909. 


இது நான் பெங்களூர் ரெயில்வே ஸ்டேஷன்ல இருக்கும்போது வெயிட்டிங்க் ஹாலில ஒட்டப்பட்ட மேட்டரு...

இந்த புண்ணியவான் மட்டும் 100 வருஷத்துக்கு முன்னாடி இப்படி கம்ப்ளைண்ட் லெட்டர் எழுதலைன்னா ட்ரைன்ல போறவங்க கதி எல்லாம் என்ன ஆகி இருக்கும் யோசிச்சிப் பாருங்க. ஏன்னா...??? இந்த நல்லவரு செஞ்ச காரியத்தினால தான் எல்லா ட்ரைன்லேயும் டாய்லெட்களை முதல் முறையா  அமைச்சாங்களாம்.

இந்த புண்ணியவானோட குடும்பம் நல்லா இருக்கட்டும்னு வாழ்த்தலாம் இல்லையா மக்கா???
----------------------------------------------------------------------

அப்புறம் உங்க கிட்ட மனம் திறந்து ஒண்ணு இரண்டு வார்த்தைங்க பேசணும் பங்காளி தோழர்களே, தோழிகளே.

என்னைப் பத்தி சில விஷயங்களை உங்களோட பகிர்ந்துக்கலாம்னு நினைக்கிறேன். என் மனசு உலகியல் வாழ்க்கையில நிலைக்கொள்ள மாட்டேங்குது. எப்போதும் ஒரு தேடுதலோடு தவித்துக்கொண்டிருக்கிறது. துறவை நாடிக்கொண்டிருக்கிறது. சின்ன வயசில இருந்தே தேடுதல் ஆரம்பிச்சிடுச்சு... மத்தவங்கப் போல இயல்பா உலகியல் வாழ்க்கையில - இல்லறத்தில ஒட்டி வாழ முடியல. இப்போ விபஸ்ஸனா தியானம் பயிற்சி செய்துக்கிட்டு இருக்கேன்.

இந்த மாசம் 15ம் தேதி மலேசியா கிளம்பி அங்கே புகழ் பெற்ற புத்த துறவி Ajahn Brahm என்கிறவர் நடத்துகின்ற 10 நாள் தியான முகாமில கலந்துக்கிறேன். டிசம்பர் 28 ஆம் தேதி திரும்பி வருகின்றேன். அப்புறம் ஜனவரி மாசம் மத்தியல இருந்து, 3 அல்லது 4 மாச காலத்துக்கு நேபாளத்தில தீவிர தியான பயிற்சியில ஈடுபடறேன்.

விட்டு விடுதலை ஆகி நிற்பாய் இந்த
சிட்டுக் குருவியைப் போலன்னு பாரதி பாடல் எனக்குள்ள ஒலிச்சுக்கிட்டே இருக்கு...

திரும்பவும் பழைய வேகத்தோடு பதிவுகளை எழுதுவேனா இல்லையான்னு எனக்கு தெரியாது. முழுமையான துறவி ஆகிவிட விருப்பம்.

எனக்கு திருமணம் ஆகவில்லை. வயது 37 ஆகிறது. பெற்றோர்களின் வற்புறுத்தல்கள் இருந்தபோதும் திருமண பந்தத்தில் நுழைய மனம் விரும்பவில்லை. அந்த எல்லாம் வல்ல இயற்கை என்னை எந்த வழியில் நடத்தி செல்கிறதோ தெரியவில்லை. கூடிய விரைவில் துறவியாகி பரந்து விரிந்துகிடக்கும் மக்கள் கூட்டத்திற்கு என்னாலான சேவைகளை செய்ய விருப்பம்.

முழுமையான துறவி ஆகும்வரை, சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம், நண்பர்கள் உங்களோட பதிவுகளை படிக்க விருப்பம். அதேப்போல மனசு விரும்புமானால் சிறு எண்ணிக்கையில பதிவுகளை எழுதவும் விருப்பம்.

மலேசியா சென்றுவிட்டு வந்தவுடன் மலேசியா பயண அனுபவங்களை எழுதறேன்.

நீங்கள் என்மீது பொழிகின்ற உங்களின் அன்பும் பாசமும் என் கண்களில் அனிச்சையாக கண்ணீரை பெருக்குகின்றது.

உங்கள் அனைவருக்கும்
என் மனத்தின் ஆழத்திலிருந்து,
உயிரின் மூலத்திலிருந்து,
என நன்றிகளையும் வாழ்த்துக்களையும்
தெரியபடுத்திக் கொள்கின்றேன்.

உங்களின் நினைவுகள் என் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கும் என்பது மட்டும் உண்மை...

இப்படிக்கு
உங்க அன்பு உறவுக்காரன்
வசந்த் 

17 Nov 2010

உள் அமைதிக்கு உகந்த படிகள் - பாகம் 3


இந்த பகுதியின் முந்தைய பாகங்கள் படிக்க இங்கே அழுத்தவும்

தயார்படுத்திக்கி கொள்ளுதலின் இரண்டாவது கட்டம்:

அனுவத்தை நமக்கு சொல்லிக்கொண்டிருக்கிறவங்க
Peace Pilgrim - அமைதிப் பயணி

அடுத்தப் படி, இப்பிரபஞ்சத்தை இயக்கும் விதிமுறைகளோடு நமது வாழ்வையும் இணைத்துக் கொள்வது என்பதாகும்.

இங்குள்ள உலகங்களும் அதில் வாழும் உயிரினங்களும் மட்டுமின்றி, அவைகளை ஆளும் விதிமுறைகளும் ஆண்டவனால் படைக்கப்பட்டவைகளே.

இயற்கை உலகிலும், மன இயல் உலகிலும் இயங்கி வரும் இந்த விதிமுறைகள் மனிதனது செயல்பாட்டையும் ஆண்டுவருகின்றன.

நாம் எந்த அளவிற்கு இந்த விதிமுறைகளை புரிந்துக்கொண்டு, நமது வாழ்வில் கடைப்பிடித்து வருகிறோமோ, அந்த அளவிற்கு நமது வாழ்வில் இசைவு வரும். எந்த அளவிற்கு இந்த விதிமுறைகளை நாம் மீறி வருகிறோமோ, அந்த அளவிற்கு நமக்கு நாமே சிக்கல்களை உருவாக்கி கொண்டவர்களாகிறோம்.

நாமே நமக்குரிய மோசமான பகைவர்கள். நமது அறியாமையினால் நாம் இசைந்த வாழ்விலிருந்து விலகியிருந்தால், அதனால் வரும் துன்பம் சிறிதளவேயாகும். ஆனால் நன்றாக தெரிந்திருந்தும் நமது அகந்தையால், விலகியிருந்தால் அதனால் வருவது பெருந்துன்பமாகும்.

நாம் படும் துன்பங்களே, நம்மை ஆண்டவனுக்கு, கீழ்படிதலுக்கு இட்டுச் செல்கின்றன. சில இயற்கை விதிகள் பிரபலமானவையாக இருந்தும், அவைகளை சரியாகப் புரிந்துக் கொள்ளாமலும், அவைகளை சரியாகப் கடைப்பிடிக்கப்படாமலும் இருக்கின்றன.

உதாரணத்திற்கு, தீயதை நன்மையினால் தான் வெல்ல முடியும் என்பது ஒன்று! இன்னொன்று, மற்றவர்களுக்கு தீங்கு செய்பவர்கள், தமக்கு தாமே ஆன்மீக ரிதியான துன்பங்களை விளைவித்துக் கொள்கிறார்கள். இந்த விதிகள் அத்தனை மனிதர்களுக்கும் பொதுவானவை. இவைகளை சரியாகப் பின்பற்றி வாழ்ந்தால் தான் உள் அமைதிக்கு வழிப் பிறக்கும்.

அதனால் நான், ஒரு இனிய திட்டத்தில் என்னை ஆழ்த்திக் கொண்டேன். அதாவது எவைகளை நான் நல்லவைகள் என்று நம்புகிறேனோ அவைகளின்படி வாழ்வது என்பதே அத்திட்டமாகும்.

அவைகளை எல்லாம் ஒரே நேரத்தில் கைக்கொண்டு என்னைக் குழப்பிக் கொள்ள நான் முயலவில்லை. மாறாக, நான் செய்து கொண்டிருக்கும் காரியம் சரியானதல்ல என்று நான் அறிந்தால், அக்காரியத்தை உடனடியாகக் கைவிட்டேன். தயங்கி தயங்கி, இந்த தீயக் காரியங்களை விடவேண்டுமா? இல்லை பரவாயில்லையா? என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. சரியானது அல்ல என்று உள்மனதிற்கு தோன்றினால் அந்த செயலை அப்படியே விட்டுவிடுதலே எனக்கு எளிதாக இருந்தது.   

மனம் பக்குவபட்டவுடனே, கெட்டதைக் கைவிடுவது எவ்வளவு எளிய செயலாக இருக்கிறது தெரியுமா? எதை செய்யவேண்டுமோ, அதை நான் செய்யாமல் இருப்பதை உணர்ந்தால், அதை நான் உடனடியாகச் செய்யத் தீவிரம் காட்டினேன். சிறிது காலத்திற்கு என் வாழ்வு இவ்வாறு கழிந்தது.

இதனால் எதை நான் நம்புகிறேனோ, அதன்படி என்னால் வாழ இப்பொழுது முடிகிறது. இல்லாவிட்டால் எனது வாழ்வு முற்றிலும் பொருளற்றதாகி இருக்கும். என்னுள்ளே இருக்கும் உன்னத ஆன்மீக ஒளிக்கு ஏற்ப நான் வாழ்ந்தபொழுது, மேலும் பல ஆன்மீக ஒளிகள் எனக்குப் புலப்பட்டதை நான் கண்டறிந்தேன். எனக்குப் புலப்பட்ட ஆன்மீக ஒளிக்குத் தக்கபடி வாழ்ந்து மேன்மேலும் புத்தொளி பெறுவதற்கு என்னை ஆயத்தப்படுத்திக் கொண்டேன்.

இயற்கையின் விதிகள் நம் அனைவருக்கும் பொதுவானவை. நாம் ஒன்றாகக் கூடிக் கலந்துரையாடி அவற்றைப் புரிந்துகொள்ள முடியும். அவ்வாறு கலந்துரையாடுவது எனது விருப்பம்.

அமைதி தூதுவர் - மகாத்மா காந்தியடிகள்


பங்காளி தோழர்களே தோழியர்களே! அமைதிப் பயணி, இன்னமும் நமக்கு நிறைய சொல்ல இருக்காங்க... 

சொன்னது வரைக்கும், உங்களை எந்தவிதத்தில பாதிச்சதுன்னு சொல்லிட்டுப் போங்களேன் மக்கா!


10 Nov 2010

ஊருக்கு நல்லது சொல்வேன்!

பங்காளி! நம்ப பழக்கமே அப்படி ஆகிப் போச்சு! எங்கே நல்லது நடந்தாலும் நாலுப் பேருக்கு கூவி சொல்லணும்னு ஒரு உந்துதல் மனசுக்குள்ளே. உங்க எல்லோருக்கும் கூட இப்படி ஒரு உந்துதல் வர்றது உண்டுதானே? ஏன்னா நான் நார்மலா இல்லையான்னு ஒரு சின்ன டவுட்! அதுதான் உங்ககிட்ட ஓப்பனா கேட்டுபுட்டேன்.

எந்த பத்திரிக்கை, எந்த டீவி எதுவானாலும், கெட்ட செய்திகளுக்கு தான் ரொம்பவும் முக்கியத்துவம் தர்றாங்க. அது மனசை பாதிக்குது. அதை தேடி படிக்கிறக்கூட்டமும் இருக்கு! மஞ்சல் பத்திரிக்கை படிக்கிற கண்கள் காமாளைக் கண்களோ என்னமோ எனக்குத் தெரியல! ஆனா உறுதியா தெரிஞ்ச விஷயம், மஞ்சல் பத்திரிக்கை படிக்கிறவங்க மனசு காமாளை மனசு!

எதுக்கு கெட்டசெய்திகளை தேடி கண்டுபிடிச்சி, படிச்சுக்கிட்டு??!! நல்ல விஷயங்களை படிப்போமே! நல்ல விஷயங்களை சிந்திப்போமே! எதனை எப்போதும் நினைத்துக்கொண்டே இருக்கின்றாயோ, அதுப்போலவே ஆகின்றாய்ன்னு விவேகானந்தரும் சொல்லிட்டுப் போயிருக்காருங்க பங்காளி!

சரி! எனக்கு கடிதம் மூலம் வந்த நல்ல செய்தி உங்ககிட்ட பகிர்ந்துக்கலாம்னு ஆசை!

இயற்கை வாழ்வியல் முறையினை ருசிப் பார்க்க சந்தர்ப்பம்  

நண்பர்களே! ஒவ்வொரு மாதமும் 3வது வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய 3 நாட்கள், இயற்கை முகாம் நடைப்பெறுதுங்க.

நடைப்பெறுகின்ற இடம்:- இயற்கை வாழ்வு நிலையம், குலசேகரப்பட்டிணம் வழி, திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டத்தில் நடைப்பெறுகிறது

இந்த நவம்பர் மாதம் 19, 20, 21 நடைப்பெறுகின்றது. இம்முகாமில் இயற்கை வாழ்வு, இயற்கை உணவு, இயற்கை மருத்துவம், ஆன்மீகம், இயற்கை வேளான்மை ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

கட்டணம்: 500 ரூபாய் மட்டுமே. இதனை சேவையாக செய்துவர்றாங்க பெரியவர் திரு. மு.. அப்பன் அவர்கள்.

தவிர, 6 மாதக் கால இயற்கை மருத்துவ பட்டயக் கல்வி, Dip in Nature Food Theraphy (DNFT) அஞ்சல் வழியில் வழங்கப்படுகின்றது. இந்தப் படிப்பில் சேருவதற்கு வயது வரம்போ, கல்வித் தகுதியோ தேவையில்லை.

3 மாத்ததிற்கு 1 முறை யோகா, மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு 7 நாட்கள் முகாம் இங்கு நடைப்பெறுதுங்க. எல்லா விவரங்களுக்கும் கீழே இருக்கிற செல்பேசி எண்களில தொடர்புக் கொள்ளலாமுங்க

எண்கள்: +91-9944042986, +91-9380873645

இந்த எண்களுக்கு சொந்தக்காரர் இயற்கை உணவு நிபுணர்: திரு. மூ. . அப்பன் அவர்கள்

இவரு இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்துஎன்கின்ற புகழ்பெற்ற புத்தகத்தை எழுதி இருக்காருங்க. இவரு எல்லாவகையான நோய்களையும் இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகளைக் கொண்டே குணப்படுத்திவிடுறாருங்க.

இயற்கை வாழ்வியலில் முறைகளை பற்றி தெரிஞ்சுக்க, கடைப்பிடிக்க ஆசை இருக்கிறவங்க அவரைத் தொடர்புக் கொள்ளலாமுங்க.  

அடுத்து நண்பர்களுக்கு சில இயற்கை வாழ்வியல் ஆர்வலர்களின் வலைப்பக்கங்களை அறிமுகப்படுத்துவதில் எனக்கு ஈடில்லாத மகிழ்ச்சி!

சகோதரி ரதிலோகநாதனோட இயற்கை உணவு என்கின்ற வலைப்பக்கம் பாருங்க! அதோட லிங்க் http://natures-food.blogspot.com/ தமிழிலேயும் ஆங்கிலத்திலேயும் எழுதி இருக்காங்க. ரொம்ப விரிவா இயற்கை உணவைப் பற்றி எழுதியிருக்காங்க

அடுத்து திரு அஸ்வின்ஜி என்கின்ற நண்பர் எழுதி வரும் வலைப்பக்கம் http://frutarians.blogspot.com/

அடுத்து திரு சாமீ அழகப்பன் என்கின்ற நண்பரும் சித்தர்களைப் பற்றி எழுதி வருகிறாருங்க. அந்த வலைப்பக்கத்தோட லிங்க் http://machamuni.blogspot.com

பங்காளித் தோழர்களே! நல்ல விஷயங்களைப் படிப்போம்! நல்ல செயல்களை செய்வோம்! ஏன் மற்றவர்களை பற்றி தவறாக புனைவு என்கின்றப் பெயரில் எழுதி சம்பந்தப்பட்டவர்களின் மனங்களில வெறுப்பை ஏற்படுத்த வேண்டும். எழுத ஏதும் இல்லை என்றால் படிப்போம். வெறுமனே மகிழ்ந்திருப்போம். இந்த ஷனத்தில் நிலைத்திருப்போம். மனம் ஆனந்தத்தில் லயித்திருக்கட்டும்!

இவங்களைப் போலவே மகிழ்சியோடு இருப்போமே
எப்பவுமே



சிந்திச்சு நல்ல முடிவெடுங்க! பதிவுலகம் வெறுப்பு மண்டிக்கிடக்கும் ரணகளமாக இருக்குது. மனசு தாங்கல! அதனால உங்க முன்னாடிக் கொட்டிட்டேன்.எதுவும் அதிகபிரசங்கித்தனமா ஒண்ணும் சொல்லிடல இல்ல?

சரி வர்றேனுங்க பங்காளி நண்பர்களே!


சிரிங்க சிரிச்சுக்கிட்டு இருங்க! இவனைப் போல கள்ளம்
கபடம் இல்லாம சிரிச்சுக்கிட்டு இருங்க...


இந்த பதிவு எல்லோர்கிட்டேயும் போய் சேறணும்னு நீங்க நினைச்சா, மறக்காம உங்க ஓட்டுகளை, கீழே இருக்கிற ஓட்டுப் பெட்டிகள்ல போடுங்க மக்கா! நீங்க எல்லோரும் தான் அன்பான பங்காளிங்க ஆச்சே! நான் சொல்லாமலே செய்றவங்க இல்லையா அப்பு?

9 Nov 2010

ஒட்டகசிவிங்கி சொல்லி கொடுக்கிறத படிங்க மக்கா!


ஒட்டகசிவிங்கி உலகத்தில் பிறப்பது என்பது மிகவும் கடினமான ஒருக் காரியமாம்ஒருக் குட்டி ஒட்டகசிவிங்கி, 10 அடி உயரத்தில் இருக்கிற தாயின் கருவறையில் இருந்து பூமியின் மீது விழுகிறதாம். அது பெரும்பாலும் தன் முதுகு புறம் பூமியில் படும்படியாகவே விழுகிறது. சிறிது நேரத்திற்கெல்லாம் அது கால்களை மடக்கி தன் உடம்போடு இணைத்துக் கொண்டு இந்த பூமியை முதன்முறை பார்க்கும். அது தன் கண்களில, காதிகளில தங்கி இருக்கிற கர்பபை நீரை நீக்க, உதறிக்கொள்கிறது. அதற்குப் பிறகு, தாய்ஒட்டகசிவிங்கி குட்டிக்கு வாழ்வின் நிதர்சனமான உண்மையினை அறிமுகபடுத்துகிறது. அது எப்படின்னு நீங்களே பாருங்க






தாயம்மா! நீங்க சொல்லிக்கொடுக்கிற வாழ்க்கை பாடம் ஜோரம்மா!!!

A View from the Zoo என்கின்ற புத்தகத்தில் கேரி ரிச்மெண்ட் (Gary Richmond) பிறந்த சிசுவாயிருக்கிற ஒட்டகசிவிங்கியின் குட்டி எப்படி தன்னுடைய முதல் பாடத்தை கற்றுக்கொள்கிறது என்பதைப் பற்றி எழுதியுள்ளார்.     

குட்டி பிறந்தவுடனே தாய் ஒட்டகசிவிங்கி, தன் தலையை போதுமானபடி தாழ்த்தி குட்டியை பார்க்குமாம். அது குட்டிக்கு நேராக அருகில் இருக்கும்படியான ஒரு நிலையில் நின்றுக்கொண்டு சில நொடிகள் அந்தக் குட்டியைப் பார்த்துக்கொண்டிருக்குமாம். பின் தன் நீண்ட கால்களை வீசி தன் குட்டியை எட்டி ஒரே உதை உதைக்குமாம். அந்த உதைக்கு அந்த குட்டி தலைக்குப்புற பல்டி அடித்து வீழ்ந்துப் புரலுமாம்.

அந்த குட்டி இந்த உதைக்கு எழுந்து நிற்காமல் போனால், திரும்ப திரும்ப இந்த வன்செயல் தொடர்ந்தபடியே இருக்கும். குட்டியும் எழுந்து நிற்க முயன்று முயன்று, மறுபடி மறுபடி கீழே வீழ்ந்துக்கொண்டிருக்கும். அது சோர்ந்துவிடும் போது, தாய் சும்மா இருக்காது. மறுபடியும் ஓங்கி ஒரு உதை! அதனுடைய முயற்சியைக் கூட்ட இவ்வாறு செய்கிறதாம். முடிவாக அந்த கன்று தன் ஆட்டம் போடும் கால்களைக் கொண்டு எழுந்து நிற்கும்.


இப்போது தாயானவள் ஒரு அதிசியதக்க காரியம் ஒன்று செய்கிறாள். எழுந்து நின்றக் குட்டியை எட்டி உதைத்து கீழே விழவைக்கின்றாள். ஏன்? ஏன் இப்படி செய்கிறாள் என்று எண்ணத்தோன்றுகிறது அல்லவா நண்பர்களே? அது ஏன்னென்றால், அந்த குட்டி தான் எப்படி எழுந்து நின்றது என்பதனை மறக்காமல் இருக்கத்தானாம். காட்டில் குட்டி ஒட்டகசிவிங்கிகள் தன் கூட்டத்தோடு இணைந்து பாதுகாப்பான இடத்தில் இருக்க, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவைகள் எழுந்து நிற்க வேண்டியது அவசியமாம். சிங்கங்கள், கழுதைப்புலிகள், சிறுத்தைகள், வேட்டைநாய்கள் என்று எல்லா விலங்குகளுக்கும் குட்டி ஒட்டகசிவிங்கிகள் விருந்தாகிப் போகிற வாய்ப்பு இருக்கிறது. அந்த தாயானவள் தன் குட்டிக்கு சீக்கிரத்தில் எழுந்து நிற்கும் பாடத்தினை கற்பிக்காதுப் போனால், கண்டிப்பாக இது நடப்பதை யாராலும் தடுக்க முடியாது

மறைந்த எழுத்தாளர் இர்விங் ஸ்டோன் (Irving Stone) இந்தக் கருத்தினை நன்கு புரிந்துக்கொண்டார். தன் வாழ்நாள் முழுவதும் மேன்மையைப் பற்றி படிப்பதிலேயே செலவிட்டவர் அவர். மைக்கேலாஞ்சிலோ (Michelangelo), வின்சண்ட் வேன் கோ (Vincent van Gogh), சிக்மெண்ட் ப்ராய்ட் (Sigmund Freud), மற்றும் சார்லஸ் டார்வின் (Charles Darwin) போன்ற பிரபல மனிதர்களைப் பற்றிய வாழ்க்கை சரிதங்களை கதைவடிவில் எழுதியவர்.

இர்விங் ஸ்டோன் அவர்களை ஒருமுறை ஒருக்கேள்விக் கேட்கப்பட்டது. அது என்னவெனில், அவர் பல பெரிய மனிதர்களின் வாழ்க்கையை ஆராய்ந்த வரையில் ஏதாவது ஒரு அம்சம் எல்லோருக்கும் பொருந்தும் அம்சமாக இருந்திருக்கிறதை கண்டாரா என்றுக் கேட்கப்பட்டது

அதற்கு அவரின் பதில், அவர்கள் எல்லோரும் பல பயங்கரமான தோல்விகளை தங்களின் வாழ்வில் சந்தித்திருக்கிறார்கள். அவர்கள் பல ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார்கள். அவர்கள் பல பல வருடங்களுக்கு ஒன்றும் உறுப்படாத நிலையிலேயே தேங்கியிருந்தவர்கள். ஆனால் எப்போதெல்லாம் அவர்கள் பலமாக அடிவாங்கி சறுக்குகிறார்களோ, அப்போதெல்லாம் எழுந்து நின்றார்கள். அவர்களை அழிக்கவே முடியாது. அவர்களின் வாழ்வின் முடிவில், அவர்கள் என்ன சாதிக்க வேண்டும் என்று நினைத்திருந்தார்களோ, அதில் மதிக்க தக்க அளவு சாதித்திருந்தார்கள்.

நண்பர்களே! ஒட்டகசிவிங்கி மனிதர்கள் எப்போதும் தோற்பதில்லை. அவர்கள் தோற்பதுப் போன்று தோற்றம் காணப்படினும் அது தற்காலிக தோல்வி தான். அவர்கள் அந்த தற்காலிக தோல்வியின் நிலையில் இருந்து சோர்வின்றி பயணம் தொடர்ந்து நிரந்தர வெற்றி என்கின்ற மலை உச்சியை சேர்ந்துக்கொள்கிறார்கள்.

அதனால் வெற்றி தேவதை, ஒரேக் கண்கொண்டு தான் எல்லோரையும் பார்க்கிறாள் என்று புரிந்துக் கொண்டு செயலாற்றுவோம். சோர்வின்றி இலக்கை நோக்கி முன்னேறிச் செல்வோம். நாம் கவனிக்க வேண்டியது நமது இலக்கு நமக்கும் நல்லதாக, ஊருக்கும் நல்லதாக இருக்கிறதா என்பதனை மட்டுமே. என் வாழ்வு மற்றவர்களின் தாழ்வு என்று இருக்குமானால் அந்த வெற்றி அடைந்தும் பயனில்லை. என் வளர்ச்சி ஊருக்கும் உலகத்திற்கும் கூட நன்மையே என்கின்ற நிலையில் இலக்கை முடிவு செய்வோம். செம்மையாக வாழ்வோம்!

குறிப்பு: இந்த பதிவில முடிவுரை மட்டும்தான் என்னுடைய சரக்கு பங்காளி! இந்த செய்தியினை, ஆங்கிலத்தில் ஒரு அருமையான நண்பரால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை தமிழ்படுத்தி முடிவிலே முடிவுரை எழுதியது மட்டுமே என்னுடைய வேலை. அதனால இந்த செய்தியினை தந்ததால், பாராட்டுக்கள் எல்லாம் அவருக்கே உரியது.    



    
இந்த பதிவு எல்லோர்கிட்டேயும் போய் சேறணும்னு நீங்க நினைச்சா, மறக்காம உங்க ஓட்டுகளை, கீழே இருக்கிற ஓட்டுப் பெட்டிகள்ல போடுங்க மக்கா! நீங்க எல்லோரும் தான் அன்பான பங்காளிங்க ஆச்சே! நான் சொல்லாமலே செய்றவங்க இல்லையா அப்பு?