பங்காளி! மனித நாகரீகமாம்! ரொம்ப உயர்ந்த நாகரீகமாம்!
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?
வள்ளுவரு நமக்குச் சொன்னது பங்காளி! உன் உடம்பை வளர்கிறதுக்காக மத்த ஜீவன்களோட உசிரை வாங்காதேன்னு சொல்றாரு! அப்படி மத்த ஜீவன்களோட மாமிசத்தை தின்னு உன் உடலை வளர்த்தா, தர்மம் எங்கே இருக்கப்போகுது சொல்லுன்னு ஸ்டார்ங்கா கேட்குறாருப்பா!
மனுஷங்க ராஷசக் கூட்டங்களா மாறி கும்பல் கும்பலா திறியறாங்கப்பா! என்னது மனுஷங்க ராஷசக் கூட்டமான்னு ஏன் கோபப்படற? உண்மை தான் சொன்னேன் பங்காளி.
நான் சொலறதக் கேட்டப்பின்னாடி, நீயே சொல்லு! சின்ன சின்ன இரும்புக் கூண்டுக்குள்ள, ஐந்தில இருந்துப் பத்து கோழிகளை அடைச்சு வைச்சிருக்காங்க. அதுங்க வாழ்நாள் முழுசும் நின்ற நிலையிலேயே தங்களோட ரக்கைங்களக் கூட விரிக்க முடியாதபடி ஒரு இறுக்கமான நிலையில அடைச்சி வைச்சிருக்காங்க.
நினைச்சிப் பாரு! அதுங்க முட்டைங்க இடற காலம் 18ல இருந்து 20 மாசம் வரைக்குமாம். அதுக்குப்பின்னாடி, அதுங்களோட பயன் தீர்ந்தப்பின்னாடி கொலைச் செய்யப்படவேண்டியது தான்.
ஆனா அந்த 18 மாசமும் நின்னபடியே இருக்கணும்னா எப்படி இருக்கும் சொல்லு? அதைவிட கொலைச்செய்யப்படுறது எவ்வளவோ மேல் இல்லையா? இப்படி நரக வேதனை தினம் அனுபவிக்கிறதுக்குப் பதிலா கொலைச் செய்யப்பட்டா கூடப் பரவாயில்லைன்னு தான் அதுங்க மனசுக்குள்ள வேண்டிக்கும் இல்லையா?
காத்துப் புகாத கூடங்கள்ல ஒரு லட்சத்துக்கும் மேலே கோழிகளை வைச்சிருக்காங்க. இப்படி அடைச்சி வைச்சிருகிறதால அதுங்க ரக்கையெல்லாம் உதிர்ந்துப்போகுது, அதுங்க இயற்கையா செய்ற மண்ணை கிளறி விடறது, மண்ணில புரல்றதுன்னு, தங்களோட ரக்கைங்களை நீவி, சுத்தம் செய்றதுன்னு, எந்த செயலையும் செய்ய விடுறதில்ல. இந்த நெரிச்சலான சூழ்நிலையால பலக் கோழிங்க மிதிப்பட்டே செத்துப்போதுங்க. நோய் தொற்றி இறந்துப்போறது, அடிக்கடி நடக்குதுப்பா!
இப்போ சொல்லப்போறது இன்னும் ரொம்பக் கொடுமை! தெரியுமா? கோழிகள் நெருக்கமா அருகருகே இருக்கிறதால, ஒன்னு இன்னொன்னை கொத்திக் காயப்படுத்திக்காம இருக்கிறதுக்கு அதுங்களோட மூக்குகளை உடைக்குறாங்கப்பா, இதுக்கு De-beaking -ன்னு பேராம். அதுவும் எப்படி? எந்த ஒரு மயக்கமருந்தும் கொடுக்காமலே. கற்பனைப் பண்ணிப்பாரு! அந்த கொடுமை எப்படி இருக்கும்னு. அதுங்களுக்கு நீங்காத துன்பமா இது அமைஞ்சுடுது.
இங்கே கீழே இணைச்சிருக்கிற வீடியோவைத் தான் கொஞ்சம் பாரு பங்காளி! உனக்கே உண்மைத் தெரியும்!
வீடியோ படம் எப்படி இருக்கு! பார்கவே பயங்கரமா இருக்குல்ல.
வருஷம் பூராவும் முட்டை இடுகிற மாதிரி ஒளியையும், வெப்பத்தையும் கூடங்கள்ல செயற்கையா பாய்ச்சுறாங்க. கோழிகளுக்கு எப்பவுமே கோடைக்காலமா தெரியணும்ங்கிறதுக்காக இந்த ஏற்பாடு.
தொடர்ந்து முட்டைகளை இடுறதால, அதுங்க எலும்புங்க எல்லாம் பலமில்லாம உடைஞ்சிப்போகுது. Osteoporosis நோய் அதுங்களை தாக்குது. அதுங்களைப் பார்க்குறதுக்கேப் பரிதாபமா இருக்கு. நோய்வாய் பட்டு சீக்கிரமா செத்துப்போகுதுங்க.
மேல இருக்கிற வீடியோவையும் பாரு பங்காளி!
இப்போ ஜீவகாரண்யத்தைப் பத்தி சொன்னேன் இல்ல. யோசிச்சிப் பாரு! இப்படி மத்த ஜீவன்களைக் கஷ்டப்படுத்தித் தான் நாம உயிர் வாழணுமான்னு நிதானமா யோசிச்சிப் பாரு!
நல்ல முடிவு எடுப்பேன்னு நம்புறேன். சீக்கிரமா அடுத்த முறை சந்திப்போம். வரேன்! வீட்டிலே எல்லோரையும் கேட்டதா சொல்லு!