இந்த பெண்மணிக்கு மாதவிடாய் பிரச்சனை மட்டும் இல்லீங்க. தினம் உயிரை வாங்க துடிக்கும் எமன்கள் போல பல பிரச்சனைகள் இருந்த்துங்க. மிகவும் பரிதாபத்திற்குறியவங்க! இந்த பெண்மணி என்ன சொல்றாங்கன்னு நீங்களே கொஞ்சம் கவனமா கேளுங்க! பயனா இருக்கும்.
![]() |
ஆங்கில மருத்துவம் மனிதர்களை கொல்லுதுங்க... :-( |
“நீங்க, சாகிற வரை கஷ்டபட்டு தான் ஆகணும். வேற வழி இல்லை. உங்க வலியை குறைக்கணும்னா Weight Tracition சிகிச்சையை தான் எடுத்துக்கணும். 2 மாசம் பெட்ல இருக்கணும். ஆனா இது நிரந்திர தீர்வு இல்ல. Pain Killers -ஐ உங்க வாழ்நாள் முழுசும் எடுத்துக்க வேண்டி இருக்கும்.”
இது தான் என்னோட தீராத முதுகுவலிக்கு Specialist டாக்டர் சொன்னது. என்னோட முதுகு தண்டுல, Disc Dislocation ஆயிடிச்சின்னு x-ray ரிபோட் காண்பிச்சதுங்க. டாக்டர்ஸ் மட்டும் இல்லேங்க, ஜோசியகாரங்களும் நான் சீக்கிரம் செத்திடுவேன்னு தான் ஜோசியம் சொன்னாங்க.
கடவுள் தான் என்னை காப்பாத்தினாருங்க! எல்லாமே கடவுள் செயல்தான்னு சொல்லணும்! கொஞ்ச நாள் கழிச்சி, திருநெல்வேலி, சிவசைலத்தில இருக்கிற நல்வாழ்வு ஆசிரமத்தை பத்தி விவரம் கிடைச்சது.
“மனுஷனோட மனசு, உடம்பு இந்த ரெண்டிலேயும் வர்ற பிர்ச்சனைக்கெல்லாம் காரணம் சமைச்ச உணவு தான். சமைச்ச உணவை தவிர்திடுங்க! இயற்கையோடு இசைந்து வாழுங்க! வெறும் பழங்களும், கொட்டைகளும் தான் மனுஷனோட உணவு. அது தான் ஈடில்லா ஆனந்தத்தை கொடுக்குமுங்க.”
“அவை உங்க உடம்புல இருக்கிற நோய்ங்களை போக்கிறது மட்டும் இல்லைங்க, உங்க முழு உடம்புக்கும், புத்துணர்ச்சி கொடுத்து, சந்தோஷத்தையும் ஆரோகியத்தையும் கொடுக்குதுங்க!” இதுதான் ஆசிரமத்தை நிறுவிய திரு. M. இராமகிருஷ்ணன் அவர்கள் எனக்கு சொன்னதுங்க.
1983 மார்ச் மாசம் எனக்கு Tubal Pregnancy-க்காக, முதல் ஆபரேஷன் நடந்தது. Fallopian Tube-ல ஒன்னு வெடிச்சிடுச்சி. 45 நாள் கருவோட அந்த ட்யூபை வெட்டி எடுத்திட்டாங்க.
அடுத்த ஆபரேஷன்ல என்னோட ‘mother fallopian tube’-ஐ எடுத்திட்டாங்க. மூனாவது ஆபரேஷன்ல கற்பபையில கட்டி இருந்ததாலே, கற்பபையையே எடுத்தாங்க. கடைசியா நடந்த ஆபரேஷன்ல அபண்டசைடீஸ்சை வெட்டி எடுத்தாங்க.
என்னோட உடம்பில இருந்து, நாலு பாகங்களையும் எடுத்து போட்டுட்டாங்க. இதற்காக, இயற்கை எனக்கு கடுமையா தண்டனைகளை அடுகடுக்கா கொடுத்ததுங்க! மூனு வருஷமா என்னை, தொடர்ந்து இருமல், சளின்னு படாதபாடு படுத்தி எடுத்ததுங்க. இங்கலீஷ் மருந்துகளோட பக்க விளைவுகள் வேற, ஒரு பக்கம், உயிரை வாங்கிடிச்சி! கடைசியா என்னை கடுமையான தீராத முதுகுவலியோடு படுத்த படுக்கையில தள்ளிடிச்சி. என்னால சரியா சுவாசிக்க முடியல, சுலபமா, நிக்கவோ, நடக்கவோ, உட்காரவோ, இல்ல படுக்கவோ முடியாதுங்க. தொடர்ந்து 24 மணிநேரமும் வலி இருக்குமுங்க. அது ஒரு நரகமுங்க. அந்த கொடுமை யாருக்குமே வரகூடாதுங்க!
இந்த மாதிரி சந்தர்பத்தில தான் நான் இயற்கை மருத்துவ சிகிச்சையை ஆரம்பிச்சேனுங்க. உபவாசம் இருக்க ஆரம்பிச்சேன். அப்போ வாந்தியை எடுக்க வெச்சி எல்லா நச்சுக்களையும் வெளியே தள்ளினேனுங்க. வாந்தி வருகிற போது, அந்த இங்கலீஷ் மருந்துகளோட நெடி அடிக்கும் பாருங்க! அவை எல்லாம் வெளியில வர்றபோ என்னால ஈஸியா அவைகளை அடையாளம் காண முடிஞ்சதுங்க.
ஒரு பத்து நாள்ல கொஞ்சம் தேறிவந்தேன். இருமலும் சளியும் முழுசா என்னை விட்டு போயிடிச்சீங்க. 20 நாள்ல என்னோட முதுகுவலியும் சரியாச்சுங்க. உபவாசம், பழஉணவு, அடுத்து, சூரியஒளி குளியல், (sunbath) கூடவே குளிர்ந்த தண்ணியில குளியல்ன்னு, தொடர்ந்து சிகிச்சை முறைகளை எடுத்துகிட்டேன். வேற எந்த சிகிச்சையும் எடுத்துக்கல.
இப்போ தான் ஆர்வமா இயற்கை வாழ்வியல் முறையை பத்தி படிக்க ஆரம்பிச்சேனுங்க. மாமிச புரதம் (Animal Protein) - அது, முட்டை, மாமிசம், பால்ன்னு எந்த வகையை சேர்ந்ததாக இருந்தாலும் மனிதனுக்கு ஏற்றது இல்லைங்க. மனிதனோட ஜீரண உறுப்புகளும், சுரப்பிகளும் அவைகளை ஜீரணிக்க கூடிய வகையில அமைக்கபடவில்லைன்னு தெரிஞ்சிகிட்டேனுங்க.
நான் கடந்த 5 வருஷமா, கொட்டைகளையும், பழங்களையும் உணவா எடுத்திட்டு வர்றேனுங்க. இப்போ உடல்நலன் நல்லபடியா தேறி வருது. உடல் எடையும் என் பழைய அளவுக்கு கூடி இருக்கு. என்னுடைய கூந்தல், நகம், பற்கள், தோல் எல்லாம் கூட நல்லவிதமா மேம்பட்டிருக்கு! என்னுடைய குணத்திலேயும் மாற்றம் வந்திருக்குங்க. நீங்க, சொன்னா நம்பமாட்டீங்க! கோபம் குறைஞ்சிருக்கு, சாந்தம் கூடி இருக்கு!
உங்களுக்கு ஒரு விஷயம் ஆச்சரியம் தர்றதா இருக்கலாம். மாத விலக்கு என்பது செயற்கையானதுங்க. பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு மாதவிலக்கு என்பது சுத்தமா கொஞ்சம் கூட வர்றதில்லைங்க. முதலில் எனக்கு மாதவிலக்கினால் பல பிரச்சனைகள் இருந்ததுங்க. வயிற்றுவலி, வெள்ளைபடுதல், அதிக இரத்தபோக்கு, கால்வலி, குடைச்சல்ன்னு பல உபாதைங்க தாளமுடியாத அளவில இருக்கும். ஆனால் இப்போ பாருங்க, மாதவிலக்குன்னு ஒன்னு சுத்தமா இல்லவே இல்லைங்க.
இந்த புதிருக்கான விடையை சொல்றேன் கேளுங்க! இயற்கை அன்னை கர்ப்பபையை, இனபெருக்கத்திற்கு மட்டுமே படைத்தாளுங்க. ஆனால் மனிதர்களில் மட்டும் தான், கழிவுகளை வெளியேற்றுகிற வேலையையும் அது சேர்த்து செய்கிற மாதிரி நிலைமை ஆச்சுங்க. வருங்கால சந்ததியினரை, விஷங்களில் இருந்து காப்பாத்துறது இயற்கையோட நோக்கமுங்க.
அதனால, மாதம் ஒரு முறை, மாதவிலக்கு என்கின்ற செயலின் மூலம் உடம்பை சுத்தம் செய்து, கட்டாயமா, கழிவு நீக்கலை செய்யுதுங்க.
இந்த மாதவிலக்கு இல்லாத ஆச்சரியம் எனக்கு மட்டும் இல்லைங்க, பல நாட்டை சேர்ந்த Fruitarians-களின் (பழங்களை உணவாக கொள்வோர்) விஷயத்திலும் கூட இது நிறுபணம் ஆகி இருக்குதுங்க.
அந்த அம்மாவுக்கு தான் கருப்பையையே நீக்கிட்டாங்களே. அப்புறமா ஏன் அவங்களுக்கு மாதவிலக்கு வரப்போகுதுன்னு உங்களுக்கு சந்தேகம் வரலாம். கருபபை இருக்கிறவங்களுக்கும் மாதவிலக்கு இல்லாத அதிசயம் நடக்குதுங்க! அந்த சந்தேகத்தை போக்கிகணும்னா இங்கே போய் படிச்சி பாருங்க அப்பு!
மாமிசபுரதம் உண்போருக்கு, உடம்பில, நச்சு பொருள் அதிகம் இருக்கிறதாலே, மாதவிலக்கு சமயத்தில, இரத்த போக்கும், துர்வாடையும் அதிகமாக ஏற்படுதுங்க. அது வயிறு, கால்களில் அதிகளவில, வலியை ஏற்படுத்துதுங்க. இயற்கை உணவாளர்களுக்கு இந்த பிரச்சனை, சிறிது வீரியம் குறைந்ச அளவில இருக்கும். ஆனால் பழ உணவாளர்களுக்கு இந்த பிரச்சனை கொஞ்சம் கூட இல்லைங்க.
அந்த அம்மாவுக்கு தான் கருப்பையையே நீக்கிட்டாங்களே. அப்புறமா ஏன் அவங்களுக்கு மாதவிலக்கு வரப்போகுதுன்னு உங்களுக்கு சந்தேகம் வரலாம். கருபபை இருக்கிறவங்களுக்கும் மாதவிலக்கு இல்லாத அதிசயம் நடக்குதுங்க! அந்த சந்தேகத்தை போக்கிகணும்னா இங்கே போய் படிச்சி பாருங்க அப்பு!
மாமிசபுரதம் உண்போருக்கு, உடம்பில, நச்சு பொருள் அதிகம் இருக்கிறதாலே, மாதவிலக்கு சமயத்தில, இரத்த போக்கும், துர்வாடையும் அதிகமாக ஏற்படுதுங்க. அது வயிறு, கால்களில் அதிகளவில, வலியை ஏற்படுத்துதுங்க. இயற்கை உணவாளர்களுக்கு இந்த பிரச்சனை, சிறிது வீரியம் குறைந்ச அளவில இருக்கும். ஆனால் பழ உணவாளர்களுக்கு இந்த பிரச்சனை கொஞ்சம் கூட இல்லைங்க.
மாதவிலக்கு தான் இல்லையே தவிர, கருமுட்டை உற்பத்தி (ovulation) எல்லாம், எல்லா பெண்களுக்கும் நடக்கிற மாதிரியே இயல்பா இருக்கும். அதில் எந்த பிரச்சனையும் இருக்காது. மலட்டு தனத்தினால் அவதிபடும் தம்பதியினருக்கு பழ உணவு பழக்கத்தால் குழந்தை பேரு கிடைக்குதுங்க. இதனை Denmark-ஐ சேர்ந்த Dr. Nolfi நிருபித்து உள்ளார்.
எல்லோரும் இயற்கை உணவுக்கு மாறணும்னு கேட்டுகொள்கிறேனுங்க!
குறிப்பு: இந்த அனுபவ மடல் “இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து” என்கின்ற புத்தகத்தில் இருந்து எடுத்தாளபட்டிருக்கிறது. இதன் ஆசிரியர். திரு. மூ.ஆ. அப்பன் அவர்கள். புத்தக பதிப்பாளர் - இந்து பப்ளிகேஷன்ஸ், சென்னை
இந்த மடலை எழுதிய பெண்மணி திருமதி. R. பாமா அவர்கள், லால்குடி, திருச்சியை சேர்ந்தவர்கள்.
நண்பர்களே! இவரின் அனுபவத்தை பற்றிய உங்களின் கருத்து என்ன? சொல்லிட்டு போங்களேன்.