பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

10 Nov 2010

ஊருக்கு நல்லது சொல்வேன்!

பங்காளி! நம்ப பழக்கமே அப்படி ஆகிப் போச்சு! எங்கே நல்லது நடந்தாலும் நாலுப் பேருக்கு கூவி சொல்லணும்னு ஒரு உந்துதல் மனசுக்குள்ளே. உங்க எல்லோருக்கும் கூட இப்படி ஒரு உந்துதல் வர்றது உண்டுதானே? ஏன்னா நான் நார்மலா இல்லையான்னு ஒரு சின்ன டவுட்! அதுதான் உங்ககிட்ட ஓப்பனா கேட்டுபுட்டேன்.

எந்த பத்திரிக்கை, எந்த டீவி எதுவானாலும், கெட்ட செய்திகளுக்கு தான் ரொம்பவும் முக்கியத்துவம் தர்றாங்க. அது மனசை பாதிக்குது. அதை தேடி படிக்கிறக்கூட்டமும் இருக்கு! மஞ்சல் பத்திரிக்கை படிக்கிற கண்கள் காமாளைக் கண்களோ என்னமோ எனக்குத் தெரியல! ஆனா உறுதியா தெரிஞ்ச விஷயம், மஞ்சல் பத்திரிக்கை படிக்கிறவங்க மனசு காமாளை மனசு!

எதுக்கு கெட்டசெய்திகளை தேடி கண்டுபிடிச்சி, படிச்சுக்கிட்டு??!! நல்ல விஷயங்களை படிப்போமே! நல்ல விஷயங்களை சிந்திப்போமே! எதனை எப்போதும் நினைத்துக்கொண்டே இருக்கின்றாயோ, அதுப்போலவே ஆகின்றாய்ன்னு விவேகானந்தரும் சொல்லிட்டுப் போயிருக்காருங்க பங்காளி!

சரி! எனக்கு கடிதம் மூலம் வந்த நல்ல செய்தி உங்ககிட்ட பகிர்ந்துக்கலாம்னு ஆசை!

இயற்கை வாழ்வியல் முறையினை ருசிப் பார்க்க சந்தர்ப்பம்  

நண்பர்களே! ஒவ்வொரு மாதமும் 3வது வெள்ளி, சனி, ஞாயிறு, ஆகிய 3 நாட்கள், இயற்கை முகாம் நடைப்பெறுதுங்க.

நடைப்பெறுகின்ற இடம்:- இயற்கை வாழ்வு நிலையம், குலசேகரப்பட்டிணம் வழி, திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டத்தில் நடைப்பெறுகிறது

இந்த நவம்பர் மாதம் 19, 20, 21 நடைப்பெறுகின்றது. இம்முகாமில் இயற்கை வாழ்வு, இயற்கை உணவு, இயற்கை மருத்துவம், ஆன்மீகம், இயற்கை வேளான்மை ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

கட்டணம்: 500 ரூபாய் மட்டுமே. இதனை சேவையாக செய்துவர்றாங்க பெரியவர் திரு. மு.. அப்பன் அவர்கள்.

தவிர, 6 மாதக் கால இயற்கை மருத்துவ பட்டயக் கல்வி, Dip in Nature Food Theraphy (DNFT) அஞ்சல் வழியில் வழங்கப்படுகின்றது. இந்தப் படிப்பில் சேருவதற்கு வயது வரம்போ, கல்வித் தகுதியோ தேவையில்லை.

3 மாத்ததிற்கு 1 முறை யோகா, மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு 7 நாட்கள் முகாம் இங்கு நடைப்பெறுதுங்க. எல்லா விவரங்களுக்கும் கீழே இருக்கிற செல்பேசி எண்களில தொடர்புக் கொள்ளலாமுங்க

எண்கள்: +91-9944042986, +91-9380873645

இந்த எண்களுக்கு சொந்தக்காரர் இயற்கை உணவு நிபுணர்: திரு. மூ. . அப்பன் அவர்கள்

இவரு இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்துஎன்கின்ற புகழ்பெற்ற புத்தகத்தை எழுதி இருக்காருங்க. இவரு எல்லாவகையான நோய்களையும் இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகளைக் கொண்டே குணப்படுத்திவிடுறாருங்க.

இயற்கை வாழ்வியலில் முறைகளை பற்றி தெரிஞ்சுக்க, கடைப்பிடிக்க ஆசை இருக்கிறவங்க அவரைத் தொடர்புக் கொள்ளலாமுங்க.  

அடுத்து நண்பர்களுக்கு சில இயற்கை வாழ்வியல் ஆர்வலர்களின் வலைப்பக்கங்களை அறிமுகப்படுத்துவதில் எனக்கு ஈடில்லாத மகிழ்ச்சி!

சகோதரி ரதிலோகநாதனோட இயற்கை உணவு என்கின்ற வலைப்பக்கம் பாருங்க! அதோட லிங்க் http://natures-food.blogspot.com/ தமிழிலேயும் ஆங்கிலத்திலேயும் எழுதி இருக்காங்க. ரொம்ப விரிவா இயற்கை உணவைப் பற்றி எழுதியிருக்காங்க

அடுத்து திரு அஸ்வின்ஜி என்கின்ற நண்பர் எழுதி வரும் வலைப்பக்கம் http://frutarians.blogspot.com/

அடுத்து திரு சாமீ அழகப்பன் என்கின்ற நண்பரும் சித்தர்களைப் பற்றி எழுதி வருகிறாருங்க. அந்த வலைப்பக்கத்தோட லிங்க் http://machamuni.blogspot.com

பங்காளித் தோழர்களே! நல்ல விஷயங்களைப் படிப்போம்! நல்ல செயல்களை செய்வோம்! ஏன் மற்றவர்களை பற்றி தவறாக புனைவு என்கின்றப் பெயரில் எழுதி சம்பந்தப்பட்டவர்களின் மனங்களில வெறுப்பை ஏற்படுத்த வேண்டும். எழுத ஏதும் இல்லை என்றால் படிப்போம். வெறுமனே மகிழ்ந்திருப்போம். இந்த ஷனத்தில் நிலைத்திருப்போம். மனம் ஆனந்தத்தில் லயித்திருக்கட்டும்!

இவங்களைப் போலவே மகிழ்சியோடு இருப்போமே
எப்பவுமே



சிந்திச்சு நல்ல முடிவெடுங்க! பதிவுலகம் வெறுப்பு மண்டிக்கிடக்கும் ரணகளமாக இருக்குது. மனசு தாங்கல! அதனால உங்க முன்னாடிக் கொட்டிட்டேன்.எதுவும் அதிகபிரசங்கித்தனமா ஒண்ணும் சொல்லிடல இல்ல?

சரி வர்றேனுங்க பங்காளி நண்பர்களே!


சிரிங்க சிரிச்சுக்கிட்டு இருங்க! இவனைப் போல கள்ளம்
கபடம் இல்லாம சிரிச்சுக்கிட்டு இருங்க...


இந்த பதிவு எல்லோர்கிட்டேயும் போய் சேறணும்னு நீங்க நினைச்சா, மறக்காம உங்க ஓட்டுகளை, கீழே இருக்கிற ஓட்டுப் பெட்டிகள்ல போடுங்க மக்கா! நீங்க எல்லோரும் தான் அன்பான பங்காளிங்க ஆச்சே! நான் சொல்லாமலே செய்றவங்க இல்லையா அப்பு?

9 Nov 2010

ஒட்டகசிவிங்கி சொல்லி கொடுக்கிறத படிங்க மக்கா!


ஒட்டகசிவிங்கி உலகத்தில் பிறப்பது என்பது மிகவும் கடினமான ஒருக் காரியமாம்ஒருக் குட்டி ஒட்டகசிவிங்கி, 10 அடி உயரத்தில் இருக்கிற தாயின் கருவறையில் இருந்து பூமியின் மீது விழுகிறதாம். அது பெரும்பாலும் தன் முதுகு புறம் பூமியில் படும்படியாகவே விழுகிறது. சிறிது நேரத்திற்கெல்லாம் அது கால்களை மடக்கி தன் உடம்போடு இணைத்துக் கொண்டு இந்த பூமியை முதன்முறை பார்க்கும். அது தன் கண்களில, காதிகளில தங்கி இருக்கிற கர்பபை நீரை நீக்க, உதறிக்கொள்கிறது. அதற்குப் பிறகு, தாய்ஒட்டகசிவிங்கி குட்டிக்கு வாழ்வின் நிதர்சனமான உண்மையினை அறிமுகபடுத்துகிறது. அது எப்படின்னு நீங்களே பாருங்க






தாயம்மா! நீங்க சொல்லிக்கொடுக்கிற வாழ்க்கை பாடம் ஜோரம்மா!!!

A View from the Zoo என்கின்ற புத்தகத்தில் கேரி ரிச்மெண்ட் (Gary Richmond) பிறந்த சிசுவாயிருக்கிற ஒட்டகசிவிங்கியின் குட்டி எப்படி தன்னுடைய முதல் பாடத்தை கற்றுக்கொள்கிறது என்பதைப் பற்றி எழுதியுள்ளார்.     

குட்டி பிறந்தவுடனே தாய் ஒட்டகசிவிங்கி, தன் தலையை போதுமானபடி தாழ்த்தி குட்டியை பார்க்குமாம். அது குட்டிக்கு நேராக அருகில் இருக்கும்படியான ஒரு நிலையில் நின்றுக்கொண்டு சில நொடிகள் அந்தக் குட்டியைப் பார்த்துக்கொண்டிருக்குமாம். பின் தன் நீண்ட கால்களை வீசி தன் குட்டியை எட்டி ஒரே உதை உதைக்குமாம். அந்த உதைக்கு அந்த குட்டி தலைக்குப்புற பல்டி அடித்து வீழ்ந்துப் புரலுமாம்.

அந்த குட்டி இந்த உதைக்கு எழுந்து நிற்காமல் போனால், திரும்ப திரும்ப இந்த வன்செயல் தொடர்ந்தபடியே இருக்கும். குட்டியும் எழுந்து நிற்க முயன்று முயன்று, மறுபடி மறுபடி கீழே வீழ்ந்துக்கொண்டிருக்கும். அது சோர்ந்துவிடும் போது, தாய் சும்மா இருக்காது. மறுபடியும் ஓங்கி ஒரு உதை! அதனுடைய முயற்சியைக் கூட்ட இவ்வாறு செய்கிறதாம். முடிவாக அந்த கன்று தன் ஆட்டம் போடும் கால்களைக் கொண்டு எழுந்து நிற்கும்.


இப்போது தாயானவள் ஒரு அதிசியதக்க காரியம் ஒன்று செய்கிறாள். எழுந்து நின்றக் குட்டியை எட்டி உதைத்து கீழே விழவைக்கின்றாள். ஏன்? ஏன் இப்படி செய்கிறாள் என்று எண்ணத்தோன்றுகிறது அல்லவா நண்பர்களே? அது ஏன்னென்றால், அந்த குட்டி தான் எப்படி எழுந்து நின்றது என்பதனை மறக்காமல் இருக்கத்தானாம். காட்டில் குட்டி ஒட்டகசிவிங்கிகள் தன் கூட்டத்தோடு இணைந்து பாதுகாப்பான இடத்தில் இருக்க, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவைகள் எழுந்து நிற்க வேண்டியது அவசியமாம். சிங்கங்கள், கழுதைப்புலிகள், சிறுத்தைகள், வேட்டைநாய்கள் என்று எல்லா விலங்குகளுக்கும் குட்டி ஒட்டகசிவிங்கிகள் விருந்தாகிப் போகிற வாய்ப்பு இருக்கிறது. அந்த தாயானவள் தன் குட்டிக்கு சீக்கிரத்தில் எழுந்து நிற்கும் பாடத்தினை கற்பிக்காதுப் போனால், கண்டிப்பாக இது நடப்பதை யாராலும் தடுக்க முடியாது

மறைந்த எழுத்தாளர் இர்விங் ஸ்டோன் (Irving Stone) இந்தக் கருத்தினை நன்கு புரிந்துக்கொண்டார். தன் வாழ்நாள் முழுவதும் மேன்மையைப் பற்றி படிப்பதிலேயே செலவிட்டவர் அவர். மைக்கேலாஞ்சிலோ (Michelangelo), வின்சண்ட் வேன் கோ (Vincent van Gogh), சிக்மெண்ட் ப்ராய்ட் (Sigmund Freud), மற்றும் சார்லஸ் டார்வின் (Charles Darwin) போன்ற பிரபல மனிதர்களைப் பற்றிய வாழ்க்கை சரிதங்களை கதைவடிவில் எழுதியவர்.

இர்விங் ஸ்டோன் அவர்களை ஒருமுறை ஒருக்கேள்விக் கேட்கப்பட்டது. அது என்னவெனில், அவர் பல பெரிய மனிதர்களின் வாழ்க்கையை ஆராய்ந்த வரையில் ஏதாவது ஒரு அம்சம் எல்லோருக்கும் பொருந்தும் அம்சமாக இருந்திருக்கிறதை கண்டாரா என்றுக் கேட்கப்பட்டது

அதற்கு அவரின் பதில், அவர்கள் எல்லோரும் பல பயங்கரமான தோல்விகளை தங்களின் வாழ்வில் சந்தித்திருக்கிறார்கள். அவர்கள் பல ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார்கள். அவர்கள் பல பல வருடங்களுக்கு ஒன்றும் உறுப்படாத நிலையிலேயே தேங்கியிருந்தவர்கள். ஆனால் எப்போதெல்லாம் அவர்கள் பலமாக அடிவாங்கி சறுக்குகிறார்களோ, அப்போதெல்லாம் எழுந்து நின்றார்கள். அவர்களை அழிக்கவே முடியாது. அவர்களின் வாழ்வின் முடிவில், அவர்கள் என்ன சாதிக்க வேண்டும் என்று நினைத்திருந்தார்களோ, அதில் மதிக்க தக்க அளவு சாதித்திருந்தார்கள்.

நண்பர்களே! ஒட்டகசிவிங்கி மனிதர்கள் எப்போதும் தோற்பதில்லை. அவர்கள் தோற்பதுப் போன்று தோற்றம் காணப்படினும் அது தற்காலிக தோல்வி தான். அவர்கள் அந்த தற்காலிக தோல்வியின் நிலையில் இருந்து சோர்வின்றி பயணம் தொடர்ந்து நிரந்தர வெற்றி என்கின்ற மலை உச்சியை சேர்ந்துக்கொள்கிறார்கள்.

அதனால் வெற்றி தேவதை, ஒரேக் கண்கொண்டு தான் எல்லோரையும் பார்க்கிறாள் என்று புரிந்துக் கொண்டு செயலாற்றுவோம். சோர்வின்றி இலக்கை நோக்கி முன்னேறிச் செல்வோம். நாம் கவனிக்க வேண்டியது நமது இலக்கு நமக்கும் நல்லதாக, ஊருக்கும் நல்லதாக இருக்கிறதா என்பதனை மட்டுமே. என் வாழ்வு மற்றவர்களின் தாழ்வு என்று இருக்குமானால் அந்த வெற்றி அடைந்தும் பயனில்லை. என் வளர்ச்சி ஊருக்கும் உலகத்திற்கும் கூட நன்மையே என்கின்ற நிலையில் இலக்கை முடிவு செய்வோம். செம்மையாக வாழ்வோம்!

குறிப்பு: இந்த பதிவில முடிவுரை மட்டும்தான் என்னுடைய சரக்கு பங்காளி! இந்த செய்தியினை, ஆங்கிலத்தில் ஒரு அருமையான நண்பரால் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை தமிழ்படுத்தி முடிவிலே முடிவுரை எழுதியது மட்டுமே என்னுடைய வேலை. அதனால இந்த செய்தியினை தந்ததால், பாராட்டுக்கள் எல்லாம் அவருக்கே உரியது.    



    
இந்த பதிவு எல்லோர்கிட்டேயும் போய் சேறணும்னு நீங்க நினைச்சா, மறக்காம உங்க ஓட்டுகளை, கீழே இருக்கிற ஓட்டுப் பெட்டிகள்ல போடுங்க மக்கா! நீங்க எல்லோரும் தான் அன்பான பங்காளிங்க ஆச்சே! நான் சொல்லாமலே செய்றவங்க இல்லையா அப்பு?

8 Nov 2010

உன்னை அறிந்தால்… நீ உன்னை அறிந்தால்

உன்னை அறிந்தால்… நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்…
உயர்ந்தாலும்… தாழ்ந்தாலும்… தலை வணங்காமல்
நீ வாழலாம்

பங்காளி! பாட்டுன்னு சொன்னா நம்ப மனசுக்கு உற்சாகம் தர்றதா இருக்கணும். அந்த வகையில கண்ணதாசனோட எளிய நடை சினிமா பாடல்களை யாரால மிஞ்சிட முடியும்? சொல்லுங்க பங்காளி!

என்ன ஆழமான வரிகள்! வாழ்க்கை தத்துவத்தையே சொல்லிடுதே இந்த பாட்டு! எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்கள்ல இதுவும் ஒண்ணு! உங்களுக்கு எப்படி பங்காளி, உங்களுக்கும் ரொம்ப பிடிச்சப் பாடலா இது? பதிலை கருத்துப்பெட்டியில சொல்லிப்போடுங்க!

இப்ப பாருங்க! Know Thyself-ன்னு சொன்னாங்க! ஆனா மனுஷனுக்கு எப்பவுமே மத்தவங்களைப் பத்தி அறிந்துக்கொள்கிறதில இருக்கிற ஆர்வம், தன்னைப் பற்றி அறிந்துக்கொள்கிறதில இல்லையே!

என்ன என்னமோ ஆராய்ச்சி எல்லாம் செய்றான்! வான சாஸ்திரம் படிச்சி வானத்தை ஆராய்ச்சி செய்றான், கடலில புதைந்து கிடக்கிற மர்மங்களை ஆராய்ச்சி செய்றான், எரிமலைகள்ல, பனிபிரதேசங்கள்ல போய் படாதபாடு பட்டு பல பல ஆராய்ச்சிகள் செஞ்சு இயற்கையை - பிரபஞ்சத்தை அறிஞ்சுக்கணும்னு துடிக்கிறான். அதனால பலப்பல பயனும் அடையறான்.


வானத்தை ஆராயத் தெரிஞ்சவனுக்கு,
மனத்தை ஆராயத் தெரியணும் இல்ல...


மனித நாகரீகம் பல பல விஷயங்களை சாதிச்சி கற்பனைக்கே எட்டாத அறிவியலோட உசரத்திற்கே போய்விட்டதுன்னு தான் சொல்லணும். அதனோட பயன்களை எல்லோருமே தான் நிதர்சனமா அனுபவிக்கிறோமே. இது ஒருப் பக்கம் மகிழ்ச்சித் தான். ஆனா வேறு விதத்தில மனுஷ நாகரீகம் கெட்டுபோய்கிட்டே இருக்கு! அது வருத்தம் தர்றதா இருக்கு.

பாருங்க பங்காளி! மனுஷன் தனக்குள்ள மூழ்கி, உள்ளே புதைந்து கிடக்கிற மர்ம முடிச்சுகளை அவிழ்க்க மறந்துட்டான். மனுஷன் அனுபவிக்கும் எல்லா இன்பதுன்பங்களுக்கு மனம் தான் காரணம் என்கின்ற விஷயத்தை புரிஞ்சுக்கிட்டா, நரகத்திலேயும் இன்பத்தை அனுபவிக்க முடியும். அதை தெரிஞ்சுக்கொள்ளாததாலே சொர்கத்திலே கூட நரகத்தை உண்டுபண்ணுகிட்டேயிருக்கான். 


நரகத்தைக்கூட சொர்கமாக மாத்தமுடியும் என்கின்ற இரகசியத்தையும் உணர மறுக்கிறான். அதனால கையில இருக்கிறது விலை உயர்ந்த இரத்தினக்கற்கள் என்கின்ற சிந்தனையில்லாம கண்ணாடி கற்கள்னு நினைச்சுக்கிட்டு தூர விட்டு எறிகிறான். சராசரி மனுஷனோட வாழ்க்கையை பத்தி தான் சொல்றேன் பங்காளி!

கொப்பளிக்கிற கோபம்! அதுவும் யார் மேல? தன்னோட உயிரா இருக்கிற நெருங்கியவங்க மேலேயே! பெத்த தாய் மேலே, கட்டிக்கிட்ட தாரத்து மேல, தந்தை மேல, சகோதர சகோதரிகள் மேல, பெத்த பிள்ளைங்க மேல. இப்படி கோபமா வார்த்தைகளை கொட்டி என்னத்தை வாரிக்கிட்டான் சொல்லுங்க!

அடுத்து பாருங்க! பேராசை படுகுழியில மூழ்குறான். அது அவனை கடனில சிக்க வைச்சு அள்ளல்படுத்தி கடைசியில அவனோட வாழ்க்கையையே குடிச்சிடுது.

இப்படியே பொறாமை, வெறுப்பு, அகம்பாவம், தாழ்வுமனப்பான்மை, பயம், அளவுக்கடந்த காம இச்சை, கருமித்தனம், வக்கிர எண்ணம் மத்தவங்களை துன்பப்படுத்திப்பாக்குறது, மிகுந்த சுயநலப்பற்றுன்னு பல பல தீய குணங்களில சிக்கி சின்னாபின்னமாகிறான். என்னமோ அடையணும்னு எண்ணி எப்பவுமே மனநிம்மதியே இல்லாத பேயாட்டம், நாயோட்டம் ஓடிக்கிட்டே இருக்கான். முடிவில மண்டையைப் போடறான்.


நம்ப முன்னோர்களைப் போல புத்திசாலிங்களை எங்கேயும் காணமுடியாது பங்காளி! இந்த துன்பங்களில இருந்து வெளியில வரணும்னா தன்னையே முழுசா அறிஞ்சிக்கணும். மனசுக்குள்ளல தான் எல்லா பாதிப்புகளும் உண்டாகுது, அவைகளை நீர்த்துப்போக செய்து கரைச்சுட்டோம்னா இந்த பாதிப்புகளில இருந்து தப்பிச்சுக்கொள்ளலாம்னு கண்டுபிடிச்சாங்க. உள்ளம் அமைதியோடு இருக்கிற இரகசியத்தை கண்டு உணர்ந்தாங்க. அதை மத்தவங்களுக்கும் சொல்லிக் கொடுத்தாங்க. அது தான் தியான பயிற்சியா பரிணாமம் அடைஞ்சது.

அம்மணி! பரவாயில்லையே தியானம் சூப்பரா செய்றீங்க!



பங்காளி! நான் இப்போ சொல்லப் போறது விபஸ்ஸனா தியான பயிற்சியைப் பத்தி தான். ஒரு பத்து நாள் அமைதியான - எந்த ஒருத் தொந்தரவும் இல்லாம, வெளியுலகத் தொடர்புன்னு எதுவும் வைச்சுக்க முடியாத ஒரு இடத்தில தியானம் கத்துக்கிறதைப் பத்தி என்ன நினைக்கறீங்க?

வேறு எந்த ஒரு வேலையிலேயும் ஈடுபடாம, முழுக்க முழுக்க மௌனம் கடைப்பிடிச்சிட்டு, எழுதறதோ, படிக்கிறதோ, யாருக்கிட்டேயும் பேசறதோ இல்லாம, பத்து நாளும் மௌனம் கடைப்பிடிச்சிட்டு தியானம் மாத்திரம் செய்துக்கிட்டு இருந்தா நமக்குள்ள ஒரு மாற்றம் உண்டாகிறதை உணர முடியும்.

நாடு முழுக்க விபஸ்ஸனா தியான மையங்கள் இருக்கு. http://www.dhamma.org/ என்கின்ற வெப்தளத்தில எல்லா விவரங்களும் இருக்கு. சென்னையிலக் கூட பல்லாவரத்தில இருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில திருமுடிவாக்கம் என்கின்ற அமைதியான இடத்தில விபஸ்ஸனா தியானம் சொல்லிக் கொடுக்குறாங்க.




இது தான் சென்னையில இருக்கிற 
விபஸ்ஸனா தியான மையம்


இதில ஹைலைட்டான விஷயம் என்னான்னு கேட்டீங்கன்னா இந்த தியானம் சொல்லிக் கொடுக்க எந்த வித கட்டணம்னு ஒண்ணும் கிடையாது. முழுக்க முழுக்க தானத்தினாலத் தான் நடக்குது. பயிற்சி முடிஞ்சுப் போகிறபோது நீங்க, தூய்மையான மனநிலையோடு உங்களால எவ்வளவு பணம் கொடுக்க முடியுமோ அதை மன நிறைவோடு வாங்கிக்கிறாங்க. அதாவது நீங்க பயிற்சியில கலந்துக்கொள்ள உங்களுக்கு முன்னால கலந்துக்கிட்டவங்க தானம் கொடுத்திருக்காங்க. அதேப்போல எனக்கு கிடைத்த மன அமைதி, மனத்தூய்மை இனி வர இருக்கிற மாணவர்களுக்கு கிடைக்கட்டும் என்று தூய மனசோடு நீங்க, உங்க வசதிக்கு என்ன கொடுக்கமுடியுமோ அந்த தொகையை கொடுங்க. அவங்க சந்தோஷமா வாங்கிப்பாங்க.

நேரம் வாய்க்கப்பெற்றவர்கள் கண்டிப்பாக தியானத்தில கலந்துக்கோங்க. கண்டிப்பா உங்க மனசில இருக்கிற விகாரங்களிலில இருந்து வெளிப்பட்டு மன அமைதியையும் சந்தோஷத்தையும் அனுபவிப்பீங்க. 

நான் கிளம்பறதுக்கு முன்னாடி உங்க பார்வைக்கு ஒரு வீடியோவை தர்றதில சந்தோஷம். இது திஹார் ஜெயிலில கிரண்பேடியினால விபஸ்ஸனா தியானத்தை அறிமுகம் செஞ்சப்பின்னாடி சிறைவாசிகள் கிட்ட எந்தவிதமான மாற்றம் வந்ததுன்னு சொல்லுகிற வீடியோ! பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கும். நேரம் இருக்கும்போது பாருங்க! ஒரு சமயம் இந்த வீடியோ வேலை செய்யலைன்னா இந்த லிங்கில சென்று பார்க்கலாம்



தியானம் இப்போ எல்லோருமே கத்துக்க ஆரம்பிச்சிருக்காங்க. நிறையப்பேரு வர்றாங்க. முக்கியமா வெளிநாட்டு ஆளுங்க வர்றாங்க!

இதெல்லாம் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு! பூமி சொர்கபுரியாக மாற வாய்ப்பு இருக்கு! என்னோட கூட இருந்ததுக்கு ரொம்ப நன்றீங்க! கட்டாயம் தியானம் கத்துக்கோங்க! மனக்கவலை, சஞ்சலம் இல்லாம வாழுங்க!

இந்த பதிவு எல்லோர்கிட்டேயும் போய் சேறணும்னு நீங்க நினைச்சா, மறக்காம உங்க ஓட்டுகளை, கீழே இருக்கிற ஓட்டுப் பெட்டிகள்ல போடுங்க மக்கா! நீங்க எல்லோரும் தான் அன்பான பங்காளிங்க ஆச்சே! நான் சொல்லாமலே செய்றவங்க இல்லையா அப்பு?