டாக்டர்களையும், மருத்துவணைகளையும் சுயநலமானவங்க, தயவுதாட்சன்யம் காட்டாதவங்கன்னு, மக்கள் நினைக்கிறாங்க. கடவுளா காட்சி தரவேண்டியவங்க இப்படி இரத்தம் குடிக்கிற கொசுவா மூட்டபூச்சியா இருக்காங்கலேன்னு மக்கள் நொந்துக்காத மேடைகளே இல்ல. ஏன்னா எல்லாரோட வீட்டிலேயும் நோய் என்கிற பயங்கரவாதியோட நிழல் படர்ந்திருக்கு. இது உண்மை தானே அப்பு!
அவங்களை சொல்லி என்ன ஆவ போகுது சொல்லு? உலகமே தனியார்மய பொருளாதர சுனாமில சிக்கிகிட்டு அள்ளல் படுது. ஒவ்வொருத்தனும் இன்னொருத்தனுடைய, தலை மேல காலை வச்சி கீழ அமுத்தி விட்டு, மேல போக பாக்கிறான். அது தான் நியாயம்னு வேற பெருமையா பேசறான், வெக்கமில்லாம.
மக்களாகிய நாம் தான் நம்முடைய உடல்-மன ஆரோகியத்தை, காப்பாத்திக்க வழி என்னான்னு பாக்கனும். என்ன பங்காளி நான் சொல்றது சரிதானே?
இந்த இயற்கை மருத்துவத்தை விட்டா நம்ப ஆரோகியத்தை காப்பாத்த முடியாது. செலவு குறைஞ்ச, பக்க விளைவுகள் இல்லாத மருத்துவம், எல்லோருக்கும் ஏத்த மருத்துவம் எதுன்னு கேட்டா, அது இந்த இயற்கை மருத்துவம் தான்னு, நம்ப காவல் தெயவம் ஐயனாரு மேல சத்தியம் செஞ்சி சொல்லுவேனுங்க.
சரி மக்கா! போன பதிவுக்கு முந்திய பதிவுல, இயற்கை மருத்துவத்தோட 2 முக்கிய விஷயங்களை பாத்தோம் இல்ல. இப்போ இங்க இன்னும் கொஞ்சம் பார்போம். அதை படிக்காதவங்க இங்க அழுத்துங்க!
மூன்றாவது விஷயம்: நம்ப உடம்பே ஒரு டாக்டரு தாங்க! அதுக்கு ஏத்த படி நடந்துகிட்டா போதும். அதாவது நாம்ப எல்லாம் தப்பா நினைச்சுகிட்டு இருக்கோம். ஏதோ டாக்டர், 7, 8 வருஷம் படிச்சவரு! அவரு கைவெச்சு பாத்து மருந்து கொடுத்தாருன்னா, நம்ப நோய் தீர்ந்துடும்னு! ஆனா உண்மை என்னான்னா, நோயை தீர்கறது, நம்ப உடம்பு தான்.
கொடுக்கிற மருந்தை வேலை செய்ய வைக்கிறது, நம்ப உடம்புக்குள்ள இருக்கிற பிராண சக்தி தான். நீங்க என்ன சக்தி வாய்ந்த மருந்து கொடுத்தாலும், நமக்குள்ள இருக்கிற பிராண சக்தி தான் அதை வாங்கி நம்ப உடம்புக்கு ஏத்த ஊட்ட பொருளா மாத்துது.
ஒரு சின்ன விஷயம்! நீங்களே கொஞ்சம் யோசிச்சு பாருங்க அப்பு! சின்ன வயசில நோய் வந்தா எவ்வளவு சீக்கிரம் குணமாகுது. ஆனா வயசான உடனே அடிக்கடி நோய் வருது. வர்ற நோயும் சீக்கிரம் போக மாட்டேங்குது. இது ஏங்க மாப்பு?
சாவு படுக்கையில இருக்கிறவங்களுக்கு என்னா உசத்தியான ராஜவைத்தியம் செஞ்சாலும், அவரோட சாவுக்கு நேரம் குறிக்கபடுதே தவிர, வேற என்ன செய்ய முடியுது மனுஷனால? சாவுன்னு சொல்றோமே, அப்படின்னா என்னா தெரியுமாங்க?
பிராண சக்தி கொஞ்சம் கொஞ்சமா மங்கி, அது முழுசா மறைஞ்சு போன பின்னாடி நாம அதை சாவுன்னு சொல்றோம். அம்புட்டுதேன்.
இது தெரியுமா உங்களுக்கு? நம்ப பிராண சக்தியை சீக்கிரமா நாம்ப தான் அழிச்சிக்கிறோம். கோப படறோமா? மனபோராட்டங்களுக்கு ஆளாகிறோமா? அசைவ உணவு சாப்பிடறோமா? தண்ணி அடிக்கறது, சிகரெட் இப்படி வேண்டாத பழக்கத்தை தொடர்றோமா? இப்படி நம்ப உடம்புக்கு எதிரான செயல்கள் செய்யும் போது செல்போன் பேட்டரில இருந்து சார்ஜ் இறங்கிற மாதிரி பிராண சக்தியும் விர்ன்னு இறங்கும் அப்பு!
புதுசா பிராண சக்தியை நம்மால உண்டாக்க முடியாது. ஆனா அதனுடைய செலவை கட்டுபடுத்தி வெச்சா, ஜீவ சமாதி வரை கூட நாம முன்னேறி போக முடியும். என்னது ஜீவ சமாதியா? ஆளை விடுங்கன்னு சொல்றீங்களா? அட விடுங்க! அட்லீஸ்ட் 100 வருஷமாவுது எல்லா உறுப்புகளும் நல்ல நிலையில செயல்பட்டு, நல்ல நிலையில வாழ்ந்த பின்னாடி, சந்தோஷமாவே செத்து போவோமே! அதுக்கு வழி இருக்கே!
நோயில்லாம வாழ முடியும் அப்பு!
அப்படி சிலபல சூழ்நிலையால நோய் வந்தா கூட, நம்ப இயற்கை அன்னை கொடுத்திருக்கிற இயற்கை மருத்துவம் இருக்கே!
உங்களுக்கு எல்லாம் ஒரு அதிர்ச்சியான சேதி சொல்லட்ட? கொடுத்திருக்கிற லிங்க பிடியீங்க! படியிங்க!
என்ன படிச்சீங்களா? அமெரிக்காவில, இங்கலீஷ் வைத்தியம் தான் ஜனங்க சாவுறதுக்கு, கேன்சர், இருதய கோளாறுகள் விடவும் பெரிய காரணமா இருக்காம். மக்கா பாத்தியா இந்த அநியாயத்தை! இதை பத்தி இணையத்தில நிறைய இருக்கு. டைம் இருக்கும் போது படியீங்க அப்பு!
சரி டைம் ஆச்சு மக்கா! இன்னொரு முறை சந்திச்சு மீதிய பேசுவோம். நான் கிளம்புறதுக்கு முன்னாடி அதே விஷயம் தான் நியாபக படுத்த விரும்பறேன்.
கருத்து இடறத, ஓட்டு போடறத சொன்னேன் அப்பு!
அண்ணன்மாருங்களே! தம்பிமாருங்களே! அக்காமாருங்களே! தாய்மாருங்களே ஓட்டு போட மறக்காதீங்க.
நம்ப அண்ணன், அன்பின் சின்னம், பாசத்தின் வண்ணம், சூரியனின் பின்னம், நம் எல்லோருடைய எண்ணம்.
அவரை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க வைப்பது நம் அனைவரின் கடமை என்று தாழ்மையுடன் சொல்லிக்கொள்ள கடமைபட்டிருக்கிறேன்.
யாருப்பா தம்பி! குடிக்க சோடா சொல்லுப்பா! தொண்ட வறலுது.