ராசா! வாங்க பங்காளி! இன்னைக்கு எந்திரன் சக்கப்போடு போடுதாமில! ரொம்ப சந்தோஷம்பா!
![]() |
தல! பட்டையை கிளப்பிட்டீங்க போல! வாழ்த்துக்கள் தல! |
ஆமா ரவி பங்காளி! நம்ப தலைவரு கலக்கி இருக்காருப்பா! ஐயோ! செம தூள்! Chance-ஏ இல்லப்பா! படம் வர்றதுக்கு லேட்டானாலும் செம லேட்டஸ்டா வந்து தூள் பண்ணிட்டாரு தெரியுமா? எத்தனை முறை வேணும்னாலும் பார்க்கலாம். ஏன் பங்காளி! நீங்க இன்னும் பார்கலைப் போல இருக்கே?
ஆமாம்பா எனக்கும் ஆசையாத்தான் இருக்கு. கண்டிப்பா பார்ப்பேன்! கொஞ்சம் சத்தமெல்லாம் அடங்கட்டும்னு காத்திருக்கேன். கொஞ்ச நாள் கழிச்சி நிதானமா பார்க்கலாம்ன்னு யோசிச்சிட்டு இருக்கேன். அப்போ டிக்கட் விலையும் நார்மலா இருக்குமில்ல.
அதுவும் சரிதான். நம்ப அளவுக்கு நீங்க தீவிரம் இல்லைங்கிற விஷயத்தை நான் மறந்தேப் போயிட்டேன்.
ஆமாங்க ராசா! நாடு முழுக்க இதேப் பேச்சா இருக்கே, அப்புறம், இன்னைக்கு காந்தி பிறந்த நாள். அதை யாராவது ஞாபகம் வைச்சிருக்காங்களாப்பா? நாம யாருமே அதை ஞாபகம் வைச்சிருக்கிற மாதிரியே தெரியலையே! இதை நினைச்சா மனசு சங்கடப்படுது.
ஓ ரவி! இன்னைக்கு காந்தியோட பிறந்தநாளா? அது தான் டாஸ்மார்க் கடை மூடி இருக்கா. “இன்று விடுமுறைன்னு” போர்ட் கூட போட்டிருக்காங்க! ஆமாம் அதைப் பார்த்தப்பின்னாடி தான் தெரிஞ்சது.
ஆமாம்பா! ரொம்ப வருத்தமா இருக்கு! இது என்ன ஒரு மோசமான நாகரீகம்னு தெரியலேயேப்பா. நாட்டுக்காக பாடுபட்டு பல தியாகங்களை செய்த நம்ப தலைவருங்களை நினைக்கிறதுக்குக் கூட ஆள் இல்லையேப்பா. அவரு பிறந்தநாளிலக் கூட சினிமா படங்களா போடறான் டீவியில. என்னக் கொடுமை சரவணன்!
நாட்டில இன்னைக்கு இருக்கிற பல அவலங்களுக்கு நாம சரியானபடி நம்ப தலைவருங்களை பத்தி தெரிஞ்சி வைச்சுக்கலைன்னு தான் காரணம் சொல்வேன்.
சினிமாவை பாருங்க! அது நம்ப பொழுதுப் போக்குக்கு முக்கியமான விஷயம்தான். வாழ்க்கையில பொழுதுப்போக்கும் வேணும் தான். அதை வேண்டாம்னு யாரும் சொல்லல. அவங்க நடிப்பை ரசிங்க! அதையும் வேணாம்னு யாரும் சொல்லலை. அதே சமயம் நம்ப நாட்டைப் பத்தியும் நினைக்கணும் இல்லையா?
நாட்டோட எதிர்காலம், ஏன் இந்த உலகத்தோட எதிர்காலமே, இளைஞர்களோட கையில இருக்குன்னு சொல்றாங்க. அந்த இளைஞர்கள் நல்ல சிந்தனைகளை வளர்த்துக்க வேணும் இல்லையா?
வெறித்தனமா நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்களை அமைச்சி, நடிகர்களோட வாழ்கையை மேம்படுத்துறதுதான் தங்களோட வாழ்க்கை இலட்சியம்னு, தங்களோட வாழ்க்கையை பாழாக்கிறவங்க எண்ணிக்கை கூடிக்கிட்டேப் போகுதேப்பா நாட்டில. இந்த அவல் நிலை மாறணுமா இல்லையா ராசா?
ரவி! நீங்க சரியாத் தான் சொல்றீங்க! நீங்க ஒன்னு கூர்ந்துக் கவனிச்சா, ஒரு விஷயம் நல்லா தெரியும், நாம, தலைவர்களை நம்ப மக்களுக்கு அறிமுகம் செய்கிற விதமே தப்பா இருக்கேப்பா.
காந்தியை பத்தி படிச்சிக்கோ! 5 மார்க் கேள்விகள்ல வரும், பெரியாரைப் பத்தி படிச்சிக்கோ! 10 மார்க் கேள்விகள்ல வரும். இந்தியவிடுதலையைப் பத்தி படிச்சிக்கோ! கட்டுரை டைப் கேள்வியா வரும்ன்னு சொல்லி சொல்லித்தானே வாத்தியாருங்க பாடம் நடத்துறாங்க. இது ரொம்ப தப்பான விஷயம் இல்லையா பங்காளி?
காந்தியை பத்தி படிச்சிக்கோ! 5 மார்க் கேள்விகள்ல வரும், பெரியாரைப் பத்தி படிச்சிக்கோ! 10 மார்க் கேள்விகள்ல வரும். இந்தியவிடுதலையைப் பத்தி படிச்சிக்கோ! கட்டுரை டைப் கேள்வியா வரும்ன்னு சொல்லி சொல்லித்தானே வாத்தியாருங்க பாடம் நடத்துறாங்க. இது ரொம்ப தப்பான விஷயம் இல்லையா பங்காளி?
அதனாலத் தான் நாம்ப எல்லோருமே, பள்ளிக்கூடத்தை விட்டதோட நம்ப தலைவருங்களைப் பத்தின நினைப்பையும் விட்டுடறோம். பாடமா படிக்கிறதால அவங்கமேல மதிப்பு வர்றதுக்கு பதிலா வெறுப்பு இல்ல வருது எல்லோருக்கும். மார்க்குக்காக படிச்சா, மார்க்கு வாங்கியப்பின்னாடி அதெல்லாம் பயன் இல்லைன்னு தானே நினைக்கத் தோணும். நீங்களும், நானும் கூட அப்படிதானே படிச்சோம். ஈடுபாட்டோடையா அவங்களைப் பத்தி படிச்சோம்? இல்லையே ரவி!
ரொம்ப எளிமையா அவங்களைப் பத்தி, கதை வடிவில, நாடகம் வடிவிலன்னு, கலைகள் மூலமா நம்ப தலைவருங்களை, இளைய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்ய தவறிட்டோமே. அதோட விளைவு தானே இதெல்லாம்.
சரியா சொல்லிட்ட ராசா! இந்த வீனாப்போனக் கல்வி முறை தாம்பா இதுக்கெல்லாம் காரணம்.
அமெரிக்காவிலப் பாரு ஆப்ரஹாம் லிங்கனை பத்தி, மார்டின் லூதர் கிங்கைப் பத்தி எல்லாம் இன்னைக்கு இருக்கிற பொடிப் பசங்க எல்லாங்கூட நல்லா தெரிஞ்சி வைச்சிருக்காங்க. அவங்கெல்லோரும், அவங்களோட தலைவருங்களைப் பத்தி சொல்லும்போதே பெருமையா சொல்றாங்க. கேட்கிற நமக்கே ரொம்ப ஆச்சரியமா இருக்கு.
அவங்க கல்வி முறை அந்த அளவுக்கு பக்குவமா அவங்களோட தலைவருங்களை, அவங்ககிட்ட கொண்டுபோய் சேர்திருக்கு.
அவங்க கல்வி முறை அந்த அளவுக்கு பக்குவமா அவங்களோட தலைவருங்களை, அவங்ககிட்ட கொண்டுபோய் சேர்திருக்கு.
அதுமாதிரி நம்ப நாட்டிலேயும் உடனடியா கல்வி முறையை மாத்தி சீரமைச்சாத்தான் இதுக்கெல்லாம் ஒரு விடிவுக்காலம் பிறக்கும்ப்பா! அதுவரைக்கும் பெற்றோர்கள் தான், அந்த பொறுப்பை எடுத்துக்கணும். நாட்டுத் தலைவருங்களைப் பத்தி பக்குவமா, தங்களோட பிள்ளைங்களுக்கு சுவாரஸ்யமா எடுத்துச் சொல்லணும்.
ஆமாங்க ரவி! நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை. நான் கூட, நீங்க சொன்ன வழிமுறையை ஃபாலோ பண்ணப்போறேன். இன்னைக்கி உங்ககிட்டப் பேசினதில ரொம்ப நல்ல விஷயம் ஒன்னுத் தெரிஞ்சிக்கிட்டேன். சரி! ரவி வரேன்பா! அப்புறமா சந்திக்கலாம்.
![]() |
தாத்தா! எந்திரனையும் பார்போம்! அதேசமயத்தில உங்க பிறந்த நாளையும் மறக்கமாட்டோம்! |
பங்காளி! இந்த ரெண்டு நண்பர்கள் பேசிகிட்டதை கேட்டீங்க இல்ல? நீங்க என்ன நினைக்கறீங்க, அவங்க சொன்ன கருத்தைப் பத்தி? ஒரு வரி சொல்லிட்டுப் போனீங்கன்னா, எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும் சொல்லுங்க!
இந்த பதிவு எல்லோர்கிட்டேயும் போய் சேறணும்னு நீங்க நினைச்சா, மறக்காம உங்க ஓட்டுகளை, கீழே இருக்கிற ஓட்டுப் பெட்டிகள்ல போடுங்க மக்கா! நீங்க எல்லோரும் தான் அன்பான பங்காளிங்க ஆச்சே! நான் சொல்லாமலே செய்றவங்க இல்லையா அப்பு?