பன்னீர் தெளிக்கிறோமில... ப்ளீஸ்... கொஞ்சம் தலை குனியுங்க...

வணக்கம் பங்காளீ! வாங்க, சவுக்கியங்களா? நம்ம வலைபதிவு பக்கம் வந்ததுக்கு நன்றீங்கோ...Get this Widget

வருகைக்கு மிக்க நன்றி

நண்பர்களே! என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி! நண்பர்களே!

மனிதர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சிந்தனைகள், இங்கு சிதறிகிடக்கிறது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை இடவேண்டுகிறேன்!

தொடர்ந்து, இந்த வலைபதிவுக்கு உங்களின் ஆதரவை தாருங்கள்!!! நன்றி! தொடர்ந்து வருக!!!

இந்த நாள், உங்களுக்கு, இனிய நாளாக அமைவதாக!!!

பாசகார பங்காளி கூட்டமுங்க! நீங்களும் கூட வாறீகளா?

28 Aug 2010

தலைவலி? சளி? காய்ச்சல்? இருமல்? ஆமாம்பா ஆமாம்!!!

உங்களுக்கு மேல சொன்ன நோய்ங்கெல்லாம்,
என்ன மாமு! மாமுல் கொடுக்க மாட்டேங்கிறியாமேன்னு மாமுலா வந்து உங்கள மிரட்டிட்டு போகிற கேஸா நீங்க?

அப்போ சரியான இடத்ததுக்கு தான் வந்திருக்கீங்க! மேல படியீங்க!

கண்டதை படிச்சா பண்டிதன் ஆவான்; சரி கண்டதை தின்னா??? நோயாளி ஆவான்னு, சொல்லி தரணுமா இல்லையா?

ஆமா! சொல்லி தந்தா மட்டும் நீங்கெல்லாம் அப்படியே கேட்டு நடந்திட போறீங்களாக்கும்! அப்படின்னு பெரியவங்க சொல்றது காதில விழுதில்ல 

சரி விஷயம் இதுதான்! நம்ப உடம்புகுள்ள அசுத்தம் பல ரூபங்கள்ல போய் சேருது. உணவு மூலமா, சுவாசிக்கிற காத்து மூலமா, குடிக்கிற தண்ணி, சாப்பிடற மருந்து மாத்திரை மூலமான்னு. உடம்புக்கு அஸ்திவாரமா இருக்கிற செல்லுல எல்லாம் கூட போய் நச்சு தன்மையோடு அசுத்தம்  தங்கிடுது பங்காளி!

ஒரு அளவுக்கு மேல உடம்புனால தாங்கமுடியாம போகுது. நோயோட ரூபத்தில வெளிபடுது. அதனால தான் நமக்கு அடிக்கடி தலைவலி, காய்ச்சல், சளி, இருமல், தோல்வியாதி, கட்டி, இப்படி நோயா வந்து பேயா ஆட்டுது (என்ன ரைமிங்க் இல்ல!! கைதட்டுங்கப்பா!!!)

சரி, அடுத்து என்ன நடக்குது? டாக்டர் கிட்ட போய் மொழி பணம் அழுவுறோம். அவர் குடுக்கிற மருந்து மாத்திரை எல்லாம் சாப்பிட்டு, உடம்பு தேறுதுன்னு ஆறுதல் படறோம்! படறோமா இல்லையா?

ஆனா டேஞ்சரே அங்க தான் இருக்குது! மருந்து மாத்திரை எல்லாம் சாப்பிட்டு வைக்கிறோமா! 4,5 நாள்ல சோர்வா எழுந்து நடமாடுவோம். நோய் போச்சான்னா? போச்சு....!!!

ஆனா... நோய் போகல. (வரும்... ஆனா வராது! வடிவேலு டயலாக் ஞாபகம் வருதா பங்காளி) 

நோய் வர்ரதுக்கு காரணமான அந்த நச்சு பொருட்கள் எல்லாம் உடம்பு உள்ளேயே தங்கி கிடக்கே தவிற வெளியே போகல! இதை கம்ப்யூட்டர் பாஷயில சொல்லனும்னா Anti Virus Software, Firewall எல்லாத்தையும் Inactive பண்ணின மாதிரி தான். வைரஸ் எல்லாம் உள்ளேயே இருக்குங்கிற மாதிரி தான். வெறும் Symtoms போச்சே தவிர நோய் போகல

இப்படியே ஒவ்வொரு முறையும் சின்ன சின்ன நோய்களுக்கும் மருந்து மாத்திரைன்னு முழுங்கிகிட்டு இருந்தா, அது உடம்போட நோய் எதிர்கிற தன்மையை திரும்ப திரும்ப, மண்டை மேல அடிக்கிற மாதிரி அடிச்சினே இருக்கிற மாதிரி தான் அப்பு!.

One Fine Day நம்மகிட்ட வைத்தியர் சொல்லுவாரு - உனக்கு இதய கோளாறு, பிளட் கேன்சர், வயித்தில அல்சர், Brain Tumour, Liver Damage, Kidney Damage-ன்னு. நாமலும் அவங்க சொல்றதுக்கு எல்லாம் தலை ஆட்டுவோம். ஆபரேஷன் செய்யனும்னு சொல்லி, நம்ப உடம்ப, பிறந்த நாள் கேக் வெட்ற மாதிரி அறுத்து கூறு போடுவாங்க.

நான் சொல்றேன்! இதெல்லாம் வேலைக்கு ஆகாது பங்காளி! சின்ன பசங்க பொம்மைய உடைசிட்டு பெரியவங்க கிட்ட வந்து அதை சரி ஆக்கி கொடுங்கன்னு கெஞ்சுவாங்க. பெரியவங்களும் அதை சரியாக்குறதுக்கு எவ்வளவோ ட்ரை செய்வாங்க. நாம இந்த ஸீனை பல இடங்கள்ல பாத்திருக்கோமில்ல?

ஆனா அதை சரியாக்க முடியாது. அதுக்கு காரணம் என்ன பங்காளி? அந்த பொம்மை உருவான சூழ்நிலை வேற, அங்கே அதுக்கேத்த மாதிரி பல மெஷின்கள் இருந்திச்சு! சின்ன சின்ன பாகங்களை கூட அழகா சேர்த்து பொம்மை ரூபமா வெளியே அனுப்புறாங்க. ஆனா, உடைஞ்சி போன பொம்மையை சரியாக்க, பெரியவங்க கிட்ட மிஞ்சி போனா, ஸ்பேனர், ஸ்க்ரு டிரைவர்ன்னு தான் இருக்கும்!!!

அதனால தான், அந்த உடைஞ்ச பொம்மையை ஒன்னாக்க முடியாம போகுது.  அதே கதை தான் இங்கேயும் நடக்குது
பணம் மட்டும் இருந்தா ஆரோகியம் வந்திடுமா அப்பு!
 கடவுள், சின்ன செல்லுக்குள்ளயே, உயரை வெச்சி அதை வளர்த்து வளர்த்து ஒரு முழு மனுஷனா மாத்துறாரு. அதனுடைய ரகசியம் தெரியாம, நானும் கடவுளோட வேலையை செய்றேன்னு சொல்லி மனுஷன் இறங்கினா வேலைக்காகுமா?

சிம்பிள் சல்யூஷன் - வயித்த காலியா போடுங்க; ஜாலியா இருங்க!!! அம்புட்டுதேன் அப்பு!

இதை நாகரீகமா, உபவாசம்ன்னு சொல்லுவாங்க! என்னது வயித்துக்கு லீவு கொடுக்கனுமா? அதுவும் நோயில படுத்திருக்கும்போது!

என்ன பங்காளி! அதிர்ச்சியை, அதிகமாத்தான் காட்டுற! இதுவரைக்கும் எத்தனை விஷயம் சொல்லி இருக்கேன். திரும்ப திரும்ப நோய் வர்ரதுக்கு மூல காரணமே உடம்புக்குள்ள சேர்ற நச்சிகழிவு தான்னு, ஏன் மறந்து போற நீ?

உபவாசம் இருந்து எந்த டாக்டரையும் பாக்காம, நோய தீத்துக்கிற வழிய பாரு பங்காளி! அது தான் உனக்கு Safe!

உபவாசம், உளர் உபவாசம் (Dry Fasting) நீர் உபவாசம் ( Water Fasting)  சாறு உபவாசம் (Juice Fasting) -ன்னு மூனு வகை இருக்கு அப்பு!

Dry Fasting-ன்னா, தண்ணிய கூட குடிக்காம உபவாசம் இருக்கிறது. அது வேண்டாம் நமக்கு

Water Fasting -ன்னா, தண்ணி மட்டுமே குடிச்சிட்டு உபவாசம் இருக்கிறது

Juice Fasting -ன்னா, அதே தான் பங்காளி, வெறும் ஜூஸ் குடிச்சிட்டு உபவாசம் இருக்கிறது.

மேல சொன்ன நோய் எதுவாச்சும் வந்ததின்னா, நீங்க கம்முனு இருந்திடுங்க! நோய் உங்களை விட்டு போய், நீங்க ஜம்முன்னு ஆயிடுவீங்க! (அட திரும்பவும் ரைமிங்க பாரு, அப்பு!)

நீர் உபவாசம் 1ல இருந்து 3 நாள் வரை Safe-ஆ வீட்டிலேயே இருக்கலாம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை தண்ணி குடிச்சிட்டு இருக்கணும். தினம் 2 இல்ல 3 முறை எனிமா எடுத்துகணும். வேலை எதுவும் செய்ய கூடாது. காலாற மெதுவா நடக்கலாம்.

ஆசன பயிற்ச்சி, பிரணயாமம் எல்லாம் மெதுவா செய்யலாம். தியானம் தெரிஞ்சவங்க தியானம் செய்யலாம். பிரார்த்தனை செய்யலாம். மத்த நேரத்தில நல்லா ஓய்வு எடுத்துகணும். நோய் வர்ரதே, உடம்புக்கு, நல்லபடியா நாம ஓய்வு கொடுக்காத காரணத்தினால தான். 

வயிறு காலியா இருக்கிறதால இப்போ உடம்பு House Cleaning, கம்ப்யூட்டர் பாஷயில சொல்லனும்னா Registry Clean upVirus Scanning செய்ய தொடங்கும்.

உடம்பும் மனசும் நல்லா தெளிவா, ஆரோகிய பாதைக்கு திரும்பறதை நீங்க எல்லாம் அனுபவ பூர்வமா உணரலாமுங்க பங்காளி! 
பார்க்கும் போதே ஜூஸ் உபவாசம் ஆரம்பிச்சிடலாம்னு தோனுதில்ல
சாறு உபவாசம்ன்னா அரை எலுமிச்சை பழ சாறில 2 இல்ல 3 தம்ளர் தண்ணி கலந்து குடிக்கிறது. இனிப்பு சுவைக்கு கொஞ்சமா தேன் சேத்துகலாம்.

ஆரஞ்சு, திராட்சை, அண்ணாசி, பப்பாளின்னு கூட பழச்சாறு குடிச்சி உபவாசம் இருக்கலாமுங்க.

உபவாசத்தை முடிக்கிற விதம் ரொம்ப முக்கியம் பங்காளி!

உபவாசத்தை முடிக்கும் போது, ஜூஸ், அப்புறம் கனிஞ்ச பழங்கள், அடுத்து இயற்கை உணவு (பச்சை காய்கறி சேலட், பழங்கள் சேலட்) அடுத்து புளி, காரம், உப்பு குறைவா இருக்கிற சமைச்ச உணவு சாப்பிடறதுன்னு படிபடியா முடிக்கனும்

இதனுடைய பயன்கள் அதிகம் பங்காளி! எல்லா நோய்ங்களும் சீக்கிரம் குணமாகுது, உடல் எடை குறையுது, ஊளைச் சதை, தொந்தி குறையுது, எல்லா செல்களும், நச்சி கழிவுகளை நீக்கி புத்துணர்ச்சி அடையுது. மனசு அமைதி ஆகி சாத்வீக குணம் மேலோங்குது.

மொத்ததில யானை பலம் உடம்புக்குள்ள சேந்திடும் (எறும்பு பலம் இருக்கிறப்பவே நம்பல யாராலேயும் சமாளிக்க முடியல..இன்னும் யானை பலம் வந்தா அம்புட்டுதேன்)

(உண்மையை அப்படியே ஒப்புகிறதில, காந்தி தாத்தாக்கு அடுத்து நீங்க தான் பங்காளி)

சரி ரைட்டு! மேட்டரு முடிஞ்சது! வர்ரேன் பங்காளி!

ஓட்டு போட மறந்திடாதிங்க! மக்களே! அது ரொம்ப முக்கியம். அப்ப தானே உங்கள மாதிரி நிறைய பங்காளிங்க கிடைப்பாங்க!

கருத்து ஏதாச்சும் இருக்கா அப்பு! தயங்காம சொல்லிட்டு போங்க!

யாருப்பா தம்பி அங்க, கூட்டத்து மத்தியில மைக்க பாஸ் பண்ணுபா!!!

27 Aug 2010

குளியலோ குளியல்! மண் குளியல் சிகிச்சை! வாறீகளா?

இயற்கை மருத்துவ முறையில, இன்னுமொரு விநோத சிகிச்சை முறைங்க அப்பு இந்த மண்குளியல் சிகிச்சை.


உடல்ல இருந்து அதிகமான உஷனத்தை நீக்கறதுக்கு இது பயன்படுதுங்க. குறிப்பா சரும நோய்கள் எதுவா இருந்தாலும் இந்த சிகிச்சை முறையை செய்யலாமுங்க!

மத்தியானம் உச்சி வெயில்ல, புத்து மண், இல்லன்னா, பசையுள்ள செம்மண்ணு, இல்லன்னா களி மண்ணை எடுத்து, நீரில நல்லா குழைச்சி, உடல் முழுக்க பூசிகொள்ளுவாங்க. இந்த சிகிச்சியின் போது, உள்ளாடை மட்டும் தான் போட்டிருப்பாங்க. 


அரைமணி நேரம் வெய்யில்ல இருப்பாங்க. காத்து பட்டு ஆறும்போது சும்மா ஜிலுஜிலுன்னு இருக்கும் பாருங்க!  (ஜில்லுன்னு ஒரு காதல் கணக்கா!) கொஞ்ச நேரம் ஆனபின்னாடி மண் காய காய, தோலை பிடிச்சி இழுக்கும் பாருங்க! அதுவும் கூட ஒரு அனுபவம் தான் பங்காளி!

பிற்பாடு நிழலில கொஞ்ச நேரம் இருந்துட்டு, பச்சை தண்ணியில போய் குளிப்பாங்க. நல்ல சுகமா இருக்குமுங்க! உடல்ல இருக்கிற கெட்ட நீர் எல்லாம் இந்த மண்குளியல் சிகிச்சையினால உறிஞ்சி வெளியேற்றப்படுதுங்க. அதனால மனசும் உடலும் லேசாயிடும்.

ஆஹா! அந்த குளிமை! அந்த ஆனந்தம்!! அதை அனுபவிச்சி பாத்தாதான் தெரியும்! வாய்ப்பு இருக்கிறவங்க செஞ்சி பாருங்க!  

சரி என்ன கேட்டீங்க? மண்ணில வேற என்ன மாதிரி சிகிச்சை முறைகள் இருக்குன்னு தெரியனுமுங்களா, அப்பு?

அதையும் சொல்லிடறேன். கவனமா கேட்டுகோங்க ராசா! (பங்காளி பயலுகளுக்கு தான் என்ன ஒரு ஆர்வம்பா!!!)

ஈரமண் பட்டி (Wet Mud Pack), போடுவாங்க. அதாவது, மலச்சிக்கல், காய்ச்சல், தலைவலி ஏற்படும்போது, ஒரு வேட்டி துணியில ஈர மண்ணை வைச்சி ஒரு அகலமான பெல்ட் போல - பட்டியாக்கி, நெத்தி, அடிவயிறு, தொப்புள் மேலேயும் இடுவாங்க. நல்லா சில்லுன்னு இருக்கும். ஒரு அரை மணி கழிச்சி எடுத்திடலாம். நல்ல பலன் கொடுக்கும்.


இப்படி மண் இல்லாம கூட வெறும் துணியை, தண்ணியில நினைச்சி கூட போடுவாங்க. இதுக்கு பேரு ஈர துணிப் பட்டி (Wet Cloth Pack). மேல சொன்ன காரணங்களுக்காக இதை பயன்படுத்தலாமுங்க! அதே போல பலனும் கொடுக்குமுங்க!

சரி இப்போ Celebration Time! 
எதுக்கா? பங்காளி! பதிவு எழுத ஆரம்பிச்சி 2 வாரத்துக்குள்ள 51 Followers சேர்ந்திருக்காங்க.

இது மகிழ்ச்சி அளிக்கிற விஷயம் தானே நமக்கு!!! JJJ

நானும் உறுப்படியா ஏதோ உங்களுக்கு நன்மை அளிக்கிற விதமா பதிவு எழுதறேன்னு நினைக்கிறேன். நான் சொல்றது சரிதானே?  நீங்க காட்டுற ஆதரவை பாக்கும்போது கண் ரெண்டும் ஈரம் ஆகுதுங்க! (சந்தோஷத்திலங்க!!!)

இது வரை என் எழுத்துக்களை படிச்சி ஊக்குவிச்சவங்களுக்கும், இனி மேல படிக்க வர்றவங்களுக்கும் டன் கணக்கா நன்றிங்கோ! நன்றி நன்றி நன்றீங்கோ!!!

நீங்க எல்லோரும், எல்லா வளமும் நலமும் பெற்று, சிறப்பா வாழனும்னு அந்த ஆண்டவன்கிட்ட பிராத்தனை செய்றேனுங்க!

மகிழ்ச்சியோட இருங்க! வாரனுங்க!!!

26 Aug 2010

பல சிக்கல் வேண்டாமுன்னா, மலசிக்கல போக்குங்க அப்பு!










மலசிக்கல் – முன்னனி நோய்கள்ல இதுவும் ஒன்னு பங்காளி! இது, இன்னைக்கு நம்ப நாகரீகத்தோட வளர்ச்சியை(!!!) காட்டுது அப்பு! வாழ்க்கையில இப்ப இருக்கிற அவசர கதி ஓட்டத்தில ஏதோ வெந்ததை தின்னு பசியை போக்கிகிட்டு ஓடிகிட்டிருக்கோம்.

சிலரு நாவுக்கு அடிமை ஆகி, டேஸ்டா இருக்குங்கிற காரணத்துக்காக வித விதமான அசைவ உணவா போட்டு தாக்கிறாங்க அப்பு! அசைவ உணவில நார் சத்து பேருக்கு கூட இல்லங்கிற உண்மையை, இவங்களுக்கு யாரும் சொல்லி தரல போல! 

உடல் உழைப்பு இல்லாம, நோகாம நோம்பு கும்புடறாங்க ஜனங்க. இன்றைய தேதியில எல்லா வேலைக்கும் மிஷினை கண்டுபிடிச்சாசி.

சிலர் தண்ணியே, போதுமான அளவு குடிக்கிறதில்ல. சொல்லபோனா சிலர் தண்ணியே குடிக்கறதில்ல. காபி, டீ, கோக், பெப்சின்னு குடிக்கிறாங்க அப்பு! 


இதுல இந்த பெண்களை பத்தி சொல்லவே வேண்டாம். அதுவும் படிக்கிற, வேலைக்கு போற பெண்கள், தண்ணி நிறைய குடிச்சா, அடிக்கடி கழிப்பறையை பயன்படுத்தனமேன்னு கூச்சப்பட்டுகிட்டு, சும்மா தொண்டயை நினைச்சிற அளவு மட்டும், தண்ணியை குடிக்கிறாங்க அப்பு! இந்த கொடுமையை எங்க போயி சொல்ல அப்பு!  

விளைவு மலசிக்கல். நாம சாப்பிட்ட உணவு 16-ல இருந்து 20 மணி நேரத்துகுள்ள ஜீரணமாகி, கழிவு பொருள், மலமா, மலக்குடல் வழியா வெளிவந்திடனும். அது தான் ஆரோகியத்தோட அறிகுறி. தினம் ஒரு முறையாவது மலத்தை கழிச்சடனுமப்பா! அப்படி வெளியேற்றபடாத மலம் தான் உடலுக்குள்ளேயே தங்கி கெட ஆரம்பிக்குது.

கெட்டு போகிற மலம் தான் இரத்திதில கலந்து, பல பல நோய்க்கும் மூல காரணம் ஆகுது. அதனால தான், இயற்கை மருத்துவ முறையில சொல்றாங்க நோய் ஒன்றே! பல அல்ல

இந்த நோய்க்கு நேரடி விளைவு என்ன தெரியுமா அப்பு? Piles Complaint (மூல வியாதி) அப்பு!

இதுக்கெல்லாம் தீர்வும் சொல்லிட்டு போங்க பங்காளி!

தீர்வா! சொல்றேன் கேட்டுகோங்க! இதில ஏதாவது ஒன்னோ இல்ல, எந்த காம்பினேஷன் ஒத்து வருதோ அதை Follow செய்யுங்க!







  காலையில எழுந்தவுடனே வெறும் வயித்தில 1 லிட்டர் தண்ணிய குடியீங்க. சுடுதண்ணியா இருந்தா பெட்டர். சிறுக சிறுக குடிச்சி பழகணும். முதலீலேயே 1 லிட்டர் குடிக்க முடியாது. குமட்டல் உணர்வு இருக்கும். குடிச்ச பின்னாடி ஒரு 20 நிமிஷம் வாக்கிங் போகணும். குடல் நல்லா வேலை செய்யும்.

பச்சை காய்கறி சேலட், முளைகட்டிய தானியம், பழங்கள் தோலோடு (உங்க வசதிக்கு ஏற்றபடி) தினமும் சாப்பிடுங்க. இது மலசிக்கல் இல்லாதவங்க கூட Follow செய்யனுங்க. மலசிக்கல் அதிகமாக இருக்கிறவங்க வாழைபழத்தை தோலோடு (நல்லா கவனிங்க! தோலோடு) சிறு சிறு துண்டுகளா வெட்டி, தேங்காய் துறுவல், கொஞ்சம் வெல்லம் கலந்து சாப்பிடுங்க. 2 நாளிலேயே நல்ல பலன் கிடைக்கும்.

உங்களுக்கு எல்லாம் தெரிஞ்ச விஷயம் தான். தண்ணிய அதிகமா குடியீங்க. 2-ல இருந்து 4 லிட்டர் தண்ணி ஒரு நாளைக்கு குடிக்கணும். பெண்களே! உங்களுக்கு தான்! தண்ணிய குடிக்க கூச்சபடாதீங்க.

நடங்கைய்யா மக்களே! என்னோட முதல் பதிவை கொஞ்சம் பாருங்க! யோகாசனத்தில, எளிமையான ஆசனங்கள் இருக்கு. (வேறு ஒரு பதிவுல விளக்கமா ஆசனங்களை பத்தி பாக்கலாமா பங்காளி?) அதுகளை செய்யலாம்.  

அடுத்து, திரிபலா சூரணம் பொடி இருக்கு. இரவில உணவு முடிச்ச 2 மணி கழிச்சி, சுடுதண்ணியில கலந்து சாப்பிடுங்க. இல்லைன்னா, கடுக்காய், அதோடு கூட நிலவாகை பொடி சமஅளவில கலந்தும் மேல சொன்ன விதமா சாப்பிடுங்க.

காபி, டீ வேண்டாங்க! கோக், பெப்ஸியும் வேண்டாங்க! இவையெல்லாம் ஆரோகியத்தை கெடுக்கிற பானங்க. மலசிக்கிலுக்கு காரணமா இருக்குங்க. இவைகளுக்கு மாற்று, துளசி, சுக்கு, தாமரை தண்டு பானங்கள் இருக்குங்க. எல்லாம் காதிகிராப்ட் கடைகள்ல, சித்த மருந்துகள் விக்கிற கடைகள்ல கிடைக்கும்.

மைதால செய்த பலகாரங்களை (Bakery Products) குறைவா சாப்பிடுங்க. அரிசி சாதத்தை குறைச்சுகோங்க. நார் சத்து அதிகமான கோதுமை, கேழ்வரகு, கம்பு, மக்காசோளம், சேத்துக்கோங்க. பச்சை வேர்கடலை ஒரு நைட் ஊறவெச்சி காலையில ஒரு பிடி அளவு சாப்பிடுங்க.  


எனிமா கேன் - நமக்கோ உற்ற நண்பன்! மலசிக்கலுக்கோ எதிரி!  









அடுத்து எனிமா கேன். படத்தில காட்டி இருக்கிறது தான் எனிமா கேன். கேன்னில தண்ணியை நிரப்பி, Tube-ல இருந்து, காற்றை வெளியேத்திட்டு, நாசிலை ஆசனவாயில் சொருகி, தண்ணீர் உள்ளே செல்லும்படி கேனை சிறிது உயரத்தில் பிடிக்கவும். நாசில் மேல தேங்காய் எண்ணெய் தடவினா எளிதில ஆசனவாயில நுழைக்க முடியும். பழக்கமாயிடிச்சின்னா இது தேவை இருக்காது!

தண்ணீர் உள்ளே சென்றபின், மலம் கழிக்கும் உணர்வு வரும். அப்படி வராதவங்க, சில தடவை, வயிற்றை உள்ளே இழுத்து வெளியே தள்ளவும். சிறிது நேரத்தில், மலம் கழிக்கும் உணர்வு வந்தவுடன் மலம் கழிக்கலாம்.  இது தாங்க அஹிம்சை எனிமா முறை.

இந்த பெயர் எதுக்குன்னா பங்காளி, நாம இந்த கேன்ல, வெறும் தண்ணிய தான் பயன்படுத்தறோம். அதனால ஒரு தீங்கும் இல்ல. மருத்துவமனையில சோப்பு நீர் பயன்படுத்தறாங்க. அது பெரிய ஹிம்சையா இருக்கும்.

எனிமா கேன் எல்லாத்துக்கும் வசதி. எங்காவது வெளியூர் பிராயாணம் போகும்போது, சாப்பிட, எங்கே பச்சை காய்கறி சேலட் கிடைக்கும்னு அலைய முடியாது. கிடைக்கிறத தான் சாப்பிட முடியும். மலம் கழிக்கணும் என்கின்ற உணர்வே வராது! அந்த சமயத்தில இதை பயன்படுத்தலாமுங்க

பஸ் பிரயாணம் செய்றதுக்கு முன்னாடி எனிமா Use செஞ்சி மலம் கழிச்சிட்டோம்னா, மனசுக்குள்ள ஒரு நிம்மதி. இனி ஒரு 12 மணி நேரத்துக்கு தொல்லை இருக்காது பாருங்க! எந்த இடத்துக்கும் உங்க பெட்டியில போட்டு எடுத்துன்னு போக முடியும். Very Portable!

இது எங்கே கிடைக்கும்னு கேக்கறீக? இது எல்லா காதிகிராப்ட் கடைகள்ல, இயற்கை மருத்துவமனைகள்ல, கிடைக்கும். விலையும் 50 ரூபாய் தான்.   

இன்னைக்கு இது போதும் இல்லையா பங்காளி! 


நண்பர்களே, நண்பிகளே! நோய் இல்லாம வாழலாங்க! நோய் நமக்கு வரவும் வேணாம், அதுக்காக கடன்பட்டு, அள்ளல்பட்டு, கஷ்டபட்டு, வருத்தபடவும் வேணாமுங்க!

நீங்க என்ன சொல்றீங்க! யோசிச்சி முடிவு பண்ணுங்க.

நான் புறப்படுறேனுங்க! நீங்க புறப்படுறதுக்கு முன்னாடி, ஓட்டு பெட்டியெல்லாம் லைனா இருக்கு பாருங்க! எல்லாதிலேயும் ஒரு ஓட்டு போடுட்டு போங்க அப்பு!
. 

கருத்து சொல்ல விருப்பம் இருக்கிறவங்க மேடைக்கு வரலாமுங்க!

    

25 Aug 2010

ஆப்பிளை கூட தோல் சீவி சாப்பிடற ஜனங்கப்பா!


ஆப்பிளை கூட தோல் சீவி சாப்பிடற ஜனங்களை பாத்திருக்கியா பங்காளி? அவங்கெல்லாம் வேத்து கிரகத்தை சேந்தவங்களான்னு ஒரு சந்தேகம்பா எனக்கு!  

அவ்வளவு நாசுக்காப்பா அவங்களெல்லாம்? சாதரண ஆப்பிள் தோலை கூட மென்னு சாப்பிட்டு ஜீரணிக்க முடியலையே இவங்களால! இது என்னான்னு கேட்டா, இதுக்கு பேரு Fashion னாமா!

கவர்ச்சியான பகைவன் நமக்கு! யாருன்னு தெரியுதா..???
ஆனா ஆட்டு குடல்கறி, தலகறின்னு மென்னு முழுங்குறாங்க! எலும்பை கூட விட்டுவைக்கிறதில்ல. கடிச்சு துப்பறாங்க! இதெல்லாம் மட்டும் எப்படிங்க ஜீரணமாகுது இவங்களுக்கு?

ஆப்பிள் பழத்தோட தோல்ல தான் அதிகமா நார் சத்து இருக்குங்குற செய்தியை கூட சொல்லி கொடுக்காத, படிப்போட விளைவு தான்பா இதெல்லாம். பெரியவங்க சொல்றது எதையும் கேட்கிறதில்ல; சொந்தமாவும் அறிவை தேடி வளர்த்துகுறதில்ல. என்னா நகாரீகமோ இது! போ பங்காளி!

உங்களுக்கு ஒன்னு தெரியுமா? நாம்ப என்ன வேலை செய்றோமோ, அதுக்கு தகுந்த மாதிரி தான் உணவு பழக்கம் இருக்கனுங்க. ஆபிஸுக்கு போய், சும்மா எழுதற வேலை செய்றவரு, எளிய உணவு - வேகவெச்ச உணவு, பழங்கள், காய்கறி சாலட் சாப்பிட்டா போதுமுங்க!

அதே கடின உடல்லுழைப்பு ஆசாமிங்கன்னா, புரத சத்து, கொழுப்பு சத்து இருக்கிற உணவை, எவ்வளவு உடல் சக்தி செலவழியுதோ அதுக்கு தகுந்த மாதிரி சாப்பிடலாம்.

ஆனா நம்ப ஐயாக்களும், அம்மாக்களும் உடல்சக்தி செலவழியிற மாதிரி வேலை எதுவும் செய்யலன்னா கூட, வேலாவேலைக்கு கொழுப்பு அதிகம் இருக்கிற அசைவ உணவா போட்டு தாக்குறாங்க!

செலவழிக்க பணம் இருக்கு! வருஷத்தில அதிக முறை, டாக்டருங்களுக்கு, மொழி பணம் கொடுக்கிற அளவுக்கு பெரிய மனசு இருக்கு, அப்புறம் அவங்க எதுக்கு கவலை படனும்னு கேட்கறீங்க. பல லட்சம் செலவு செஞ்சி படிச்ச, டாக்டருங்களோட புழைப்பு எப்படிப்பா ஓடும்ன்னு வேற கேட்கறீங்களா! டாகடருங்க மேல உங்களுக்கு இருக்கும் கரிசனத்தை பாராட்டாம இருக்க முடியாது.

ஆனா கைக்காசும் கொடுத்து நம்ப உடம்பை கெடுத்துகலாமான்னு தான் சொல்றேன் பங்காளி!

ஆனா நீங்க சொல்றதும் சரிதான். நான் என்னா செஞ்சும் என் உடம்பை கெடுத்துப்பேன்னு சொல்றவங்க கிட்ட நாம என்ன சொல்லமுடியும்பா? பட்டா கூட இவங்களுக்கு புத்தி வரமாட்டெங்குது. திரும்ப திரும்ப ஒரே பள்ளத்தில, கண்ண திறந்துகினே விழுவேன்னு சொல்றவங்க! செம்மறி ஆட்டுமந்த கூட்டமப்பா!

சரி விடு! நம்ப கதைக்கு வரலாம். இயற்கை மருத்துவத்தோட சில முக்கியமான விஷயங்களை தொடர்ந்து பாத்திட்டு வர்றோமில்ல. சரி போன பதிவோட தொடர்ச்சியை இப்போ பார்போம்மா?     

ஐந்தாவது முக்கிய விஷயம்: இயற்கை மருத்துவத்தில நோயை குணபடுத்த எந்த ஒரு முயற்ச்சியும் செய்ய மாட்டாங்க! அதுக்கு மாறா, நோயாளியையே முழுசா குணமாக்குவாங்க!

அதாவது நோயோட அறிகுறிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டாங்க! மாடு முன்னால நடந்தா, அதனோடு பூட்டபட்டிருக்கிற வண்டியும் முன்னாடி தானே நகறும். அந்த டெக்னிக்கை தான் இங்கேயும் Follow பண்றாங்க. ஆங்கிலத்தில இதை Holistic Approach -ன்னு சொல்லுவாங்க!

நோயோட அறிகுறி எதுவா இருந்தாலும் சரி அதுக்கு மருத்துவ சிகிச்சை எல்லாம் ஒன்னே தான். இன்னேரம் நீங்க கண்டுபிடிச்சி இருப்பீங்க. உடம்புல இருக்கிற எல்லா வாசல்கள் மூலமா, உடம்பு குள்ளே தேங்கிவிட்ட கழிவுகளை வெளியேத்துகிற முயற்ச்சி தான் செய்வாங்க.

முதல்ல அஹிம்சா எனிமா (அப்போ ஹிம்சை எனிமா கூட இருக்கா?!! இருக்காவா, இருக்கு பங்காளி, அடுத்த பதிவில இதபத்தி தான் பேசலாம்னு இருக்கேன்) பயன்படுத்த செய்வாங்க. மலம் வெளியேறி, அதன் மூலமாவே உடம்புல தங்கிவிட்ட முக்கால் வாசி கழிவு பொருட்கள் வெளியேறிடும்.

அடுத்த சிகிச்சை முறை, வயித்துக்கு ஓய்வு கொடுப்பாங்க. புரியலியா பங்காளி! அதாவது உபவாசம். பல ரகமான உபவாசம் இருக்குங்க. Dry Fasting (வெறும் உபவாசம்), Water Fasting (நீர் உபவாசம்), Juice Fasting (பழரச உபவாசம்)

மீதி சூரிய குளியல், வாழையிலை குளியல், நீராவி குளியல்ன்னு பல முறைகள் பயன்படுத்தி, தோல் துவாரங்கள் வழியா வேர்வை சுரப்பிகள் அடைப்பட்டு இருக்கிறதை சரிசெய்வாங்க. (எல்லா முறைகளுக்கும் தனி தனி பதிவு, படங்களோடு போடறேன் பங்காளி)

கண் கழுவும் கப், மூக்கு குவளை, உப்பு நீர் குடிக்க வைச்சி வாந்தி எடுக்க வைக்கிறதுன்னு எல்லாம் கழிவுகள் நீங்கிற சிகிச்சை முறைகள் தான் செய்வாங்க.

யோகாசனம் பிராணயாமம் முறைகளை கூட சேக்கிறதால ஒரு முழுமையான சிகிச்சை முறை நோயாளிக்கு (Holostic Approach) கிடைக்குது. அதனால எந்த மாதிரி நோயும், எந்த தீவிர நிலையில இருந்தாலும் கண்டிப்பா இதன் மூலமா குணம் நிச்சயம். கெமிகல்ஸ் எந்த ரூபத்திலேயும் நம்ப உடம்புகுள்ள போக அனுமதிக்க மாட்டாங்க.  

நம்ப உடம்போட நோய் எதிர்க்கும் சக்தியை உசுப்பி விடறதுக்கு தான் இதெல்லாம் செய்றது. நோய் எதிர்க்கும் சக்தி, நல்ல நிலையிக்கு திரும்பின பின்னாடி, நோயை தீர்க்கிற வேலையை, நம்ப உடம்பே பாத்துக்கும்.

இந்த முறையில செய்ற சிகிச்சை எல்லாம், உடம்போட குணபடுத்திற சக்திக்கு ஒத்தாசை செய்றது தான். அதனால கத்தி வச்சி உடம்பை அறுத்து கூறு போடற கதையெல்லாம் கிடையாது.

மௌன புரட்சியா பல தீராத நோய்களை குணமாக்குறாங்க அப்பு! செலவும் குறைவு! நம்ப காந்தி தாத்தா பரிந்துரைச்ச முறை.

உங்களுக்கெல்லாம் இப்ப நம்பிக்கை வந்திருக்கும்ன்னு நினைக்கிறேன்.

அப்பு! மறக்காம ஓட்டு போடுங்க! இந்த மருத்துவ முறையை நம்ப ஜனங்க கிட்ட பிரபளமாக்கிடலாம்!

முந்தைய பதிவுகளுக்கு ஓட்டுபோட்டு பதிவுகளை பிரபளமாக்கிய எல்லோருக்கும் நன்றீங்க!

மறுபடியும் சந்திக்கலாமுங்க! நிறைய சிந்திக்கலாமுங்க!! வரேனுங்க!!!
  

23 Aug 2010

உண்மை சொல்லனும்னா! நோய்யை பத்தின அறிவே சுத்தமா நமக்கு இல்ல!

ஆமாங்க பங்காளி! நோய் நமக்கு பகைவன்கிற பார்வை நம்ப எல்லோர் கிட்டேயும் பரவலா இருக்கா இல்லையா? அது தப்புங்க, நோய் நமக்கு பகைவன் இல்லீங்க! அது பகைவன் ரூபத்தில வேஷம் கட்டிட்டு வந்து நம்ப கிட்டேயே பூச்சாண்டி காட்டுது.

குறிப்பு: முன்னே எழுதிய பதிவுகளை கொஞ்சம் படிச்சிட்டு வாங்க பங்காளி! இயற்கை மருத்துவத்தில பரிச்சயம் இல்லன்னா, தலையும் புரியாது வாலும் புரியாது.

நம்ப உடம்புல எல்லாம் ரொம்ப சிம்பிள் மெகனிஸமுங்க. கடவுள் அப்படி தான் படைச்சாரு! இயற்கையில பார்க்கிற எல்லாமே சிம்பிள் தான். நாம தான் “பத்தினியை கைவிட்டு, வேசி பின்னாடி அலைஞ்ச கதையா இயற்கையை கைவிட்டு, முடிஞ்சா அதை சாவடிச்சுட்டு, செயற்கையை கொண்டாடுறோம்.

வினோத விந்தை மனுஷங்க நம்மை சுத்தியே, நிறைய பேரு இருக்காங்க. சிலரை பாத்திருக்கேன். நீங்களும் கூட பாத்திருக்கலாம்! உதாரணத்துக்கு ஒண்ணு சொல்றேனே! மிளகு பொங்கல்ல, மிளகு சேர்க்குறதே, அந்த உணவு நல்லபடியா ஜீரணம் ஆகணும்னு தான். ஆனா அதுங்களை முதல் வேலையா, தூர எடுத்து போட்டிட்டு, வெறும் பொங்கலை மட்டும், சாப்பிடறவங்க இருக்காங்க!

இவங்கெல்லாம் அதி புத்திசாலி கூட்டத்தை சேர்ந்தவங்க. Highly Sophisticated and disease proned!!!

இள்நீர், மோர், நல்ல தண்ணீ, இதெல்லாத்தையும் விட்டுவிட்டு, கோக், பெப்ஸின்னு குடிச்சு தாகத்தை தீத்துக்கராங்களாம். அந்த மாதிரி ஆஸிட் எல்லாம் கழிவறையை சுத்த படுத்த லாயக்குன்னு சொல்றாங்கப்ப, விஷயம் தெரிஞ்சவங்க. அதை வயித்து குள்ள ஊத்தலாமா? சொல்லு, நீயே சொல்லு பங்காளி!

இந்த மாதிரி விந்தை மனுஷங்களுக்கு, தங்களோட மோசமான பழக்கவழக்கங்களால, நோய் எல்லாம் ஆட்டோ பிடிச்சு, விலாசம் கண்டுபிடிச்சு, ரவுண்டு கட்டி அடிக்கும்னு ஒரு சாதரண அடிப்படை அறிவு கூட எதுவும் இல்ல.

ஊதர சங்க ஊதரேம்பா, உங்களுக்கு கெடுதல் நினைக்காத உங்க உறவுகாரன்ங்கிற முறையில. இந்த பங்காளி சொல்றதை கேட்டீங்கன்னா நோயில்லாம வாழலாம். உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் இந்த விஷயமெல்லாம் சொல்லுங்க! அவங்க புத்தி நல்லா இருந்தாக்கா கண்டிப்பா எடுத்துப்பாங்க!

சரி போன பதிவோட தொடர்ச்சியை இப்போ பார்போம்மா?

இயற்கை மருத்துவத்த பத்தின முதல் மூனு விஷயங்கள், முந்திய பதிவுகளில் இருக்குங்க!

நாலாவது விஷயம்: நோயிக்கு அடிப்படை காரணம் எந்த ஒரு பேக்டீரியாவோ வைரஸோ இல்ல. இது நிறைய பேர்களுக்கு புது தகவலா இருக்கும்!

பேக்டீரியாவும் வைரஸும், நம்ப உடம்புல தேங்கி இருக்கிற கழிவு பொருள்ளத்தான், காம்பிளான் குடிக்காமலேயே கிடுகிடுன்னு வளரும். நம்ப உடம்புக்குள்ள தேங்கி நிக்கிற வெளியேற்றபடாத, கழிவு பொருள் தான் அதுங்களுக்கு டானிக்!!!

நடைபயிற்சி, யோகாசனம்னு எதுவும் செய்யலேன்னா, உணவில கவனம் செலுத்தலேன்னா, அதாவது நார் சத்து (Fibre Content) இல்லாம இருக்கிற உணவுகள, கொழுப்பு சத்து அதிகமா இருக்கிற உணவுகள, டேஸ்ட் நல்லா இருக்குன்னு, விடாம சாப்பிட்டு வந்தா, நம்ப குடல் சரியானபடி வேலை செய்யாது.

கழிவுகளை அகற்ற முடியாததால, சேர்கிற கழிவுகள் உடம்புக்குள்ளேயே தங்கிடும். கொஞ்சம் கொஞ்சமா சேர்ந்து கடைசியில இந்த கழிவுகள் ரத்த்த்திலேயும் கலந்திடும்.

பாத்தா எல்லாம் அழகாத்தான் இருக்குது! ஆனா வயித்துகுள்ள தள்ளினாத்தான்....
நார் சத்து இல்லாத உணவு எதுன்னு கேட்கறீங்க இல்ல? மைதாவில செய்த உணவு வகைங்க, (பரோட்டா, கேக், பன், பிஸ்கேட், பிரட், பீட்ஸா, பர்கர்...லிஸ்ட் ரொம்ப நீளம்!!!), பாலீஷ் பிடிக்கபட்ட வெள்ளை அரிசி, மாமிச, முட்டை வகையறாக்கள், ஸ்வீட்ஸ், சாக்லேட், சிப்ஸ் etc.., etc.., etc..,       

ரத்த்தில கலந்த பின்னாடி, இந்த கழிவு பொருட்கள், உடம்புல இருக்கிற எல்லா செல்லிலேயும் போய் தங்கிடும். இப்போ தான் நம்ப உடம்பு Hot Breeding Bed ஆ மாறிபோகுது. நம்ப உடல் To-Let போர்ட் மாட்டிகிட்டு எல்லா கிருமிங்களுக்கும், வாடகை எதுவும் வாங்காத தாரளமனசு கொண்ட வீட்டுகார்ரரா மாறி, குடிவற அனுமதிக்குது.

இதன் மூலமா நாம இப்ப புரிஞ்சுக்க வேண்டியது, வைரஸ், பேக்டீரியாவால நம்ப ஆரோகியம் கெடல. நம்ப ஆரோகியம் கெட்டபின்னாடி தான் வைரஸ் பேக்டீரியா எல்லாம் கூட்டனி அமைச்சுகிட்டு நம்ப விலாசம் தேடி வருதுங்க!

நீங்க மட்டும் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை வாழ்ந்தீங்கன்னா, நீங்க ஏதோ ஒரு சந்தர்பத்தில, அசுத்தமான தண்ணிய குடிக்க நேர்ந்தா கூட, அதனால உங்க உடம்புக்கு ஒரு கெடுதலும் வராதுங்க!

ஏன்னா, அந்த அசுத்த தண்ணி மூலமா நம்ப உடம்புக்குள்ள போற கிருமிகளை அழிச்சி வெளியே துரத்திற வேலைய நம்பு உடம்பே பாத்துக்கும், provided நீங்க உங்க உடம்பில எந்த ஒரு வெளியேற்ற படாத கழிவுகளும் இல்லாத மாதிரி பாத்துக்கணும், நல்ல பழக்கவழக்கங்களை கடைபிடிச்சு, நம்ப உடம்புகுள்ளே இயங்குகிற, ரத்தஓட்டம், காற்றோட்டம், பிராணவோட்டம் எல்லாம் சரியானபடி இருந்திச்சின்னா நோய் நம்ப பக்கம் வர்றதுக்கே பயப்படுங்க!   

இதை நம்ப குலதெய்வம் மகமாயி மேல சத்தியம் செஞ்சி சொல்றேனுங்க. நம்பறீங்க இல்ல! உங்களுக்கு கெடுதல் நினைக்கமாட்டேன் அப்பு! உங்க பங்காளியா வேற இருக்கேன்! உண்மையை தான் சொல்றேன்.

வரேனுங்க! கொஞ்ச வேலை இருக்குதுங்க! மறக்காம ஓட்டும் கருத்தும் இடுங்க!

கருத்து சொல்றவங்களுக்கு என் மனசுல எவ்வளவு மரியாதை தர்றேன்னு நீங்களே பாருங்க!